பக்கம் எண் :

New Page 1

சப்பாணிப்பருவம்

45

வேறு

    முதுமொழி நினைவுதெ ரிந்த நாவலர்
        முட்டா துனைப்பு கழவே
    முளரியில் மருவிய ருந்த நான்முகன்
       முக்கா லுமிச்சை சொலவே

    புதுமலர் சிதறிம கிழ்ந்து வானவர்
        பொற்றா ளினைப்ப ரவவே
    புகலரும் இசைதெரி தும்பு ராதியர்
        புக்கா தரித்து வரவே

    மதுகரம் இடறிய தொங்கல் மாலிகை
        மற்பூத ரத்த சையவே
    மணியொளி வயிரம் அலம்பு தோள்வளை
        மட்டாய் நெருக்கம் உறவே

    சதுமரை முனிவர்கள் தங்கள் நாயக
        சப்பாணி கொட்டி யருளே
    சரவண பவகுக செந்தில் வேலவ
        சப்பாணி கொட்டி யருளே.

    (அ-ரை)  நாவலர்-நாவன்மையுடையவர். முளரி-தாமரை: முள்ளையுடைய தண்டையுடையது.  ஆதரித்து-விரும்பி.  மதுகரம்-வண்டு; தேனைச் சேர்ப்பது. மல்பூதரம்-மற்போர் செய்கின்ற தோளாகிய மலை.  மட்டு-அளவு.        

(40)