6. வாரானைப்பருவம்
மூரிப்ப கட்டு வரிவாளை
முழங்கிக் குதிக்கக் கால்சாய்ந்து
முதிர விளைந்து சடைபின்னி
முடங்கும் பசுங்காய்க் குலைச்செந்நெல்
சேரிக் கருங்கை மள்ளர்குயந்
தீட்டி அரிந்த கொத்தினுக்குத்
தெண்முத் தளப்பச் சிறுகுடிலிற்
சேரக் கொடுபோய் அவர் குவிப்ப
வேரிக் குவளைக் குழியில்வரி
வெண்சங் கினங்கள் ஈற்றுளைந்து
மேட்டில் உகுந்த பருமுத்தை
வெள்ளோ திமந்தன் முட்டையென
வாரிக் குவிக்குந் திருச்செந்தூர்
வடிவேல் முருகா வருகவே
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.
(அ-ரை) மூரிப்பகட்டு வரிவாளை-வலிமையுடைய
வரிபொருந்திய ஆண் வாளைமீன். சடைபின்னி - ஒன்றொடொன்று சுற்றி, முடங்கும்-வளையும். சேரிக்
கருங்கைமள்ளர். பட்சேரியிலிருக்கும் வலிய கையையுடைய மள்ளர்கள் (பள்ளர்) குயம்-அரிவாள்.
குடில்-சிறுவீடு வேரி-தேன். ஈற்றுளைந்து - கருவுயிர்த்து. உகுத்த-சொரிந்த. வெள்ளை ஓதிமம்-வெள்ளை
அன்னம்.
(52)
|