56 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
புள்ள மரிந்த கதிர்ச்செந்நெற்
போரிற் பகடுதனைநெருங்கப்
பூட்டி அடித்து வைகளைந்து
போதக் குவித்தபொலிக்குவையை
விள்ள அரிய குடகாற்று
வீசப் பதடி தனைநீக்கி
வெள்ளிக் கிரிபோற் கனகவட
மேரு கிரிபோல் மிகத்தூற்றிக்
கள்ளம் எறியுங் கருங்கடைக்கட்
கடைசி பிரித்த மணிமுத்தைக்
களத்தி லெறிய அம்முத்தைக்
கண்டுகுடித்த கட்குவிலை
மள்ளர் அளக்குந் திருச்செந்தூர்
வடிவேல் முருகா வருகவே.
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.
(அ-ரை) புள்ளம்-அரிவாள். பகடு
- எருமைக்கடா, வை - வைக்கோல். போதகுவித்த - போகுமாறு செய்து குவிக்கப்பட்ட, குவை - குவியல்.
விள்ள - பிரிய. குடகாற்று - மேல்காற்று, கோடை, பதடி - பதர். கிரி - மலை. கள்ளம் - வஞ்சம்.
கடைசி - உழத்தி. கட்கு - கள்ளுக்கு. குரும்பை - தென்னம்பிஞ்சு; இளநீர்.
(53)
தேட அரிய மணியதைஞாண்
சேர்க்க வருக விரற்காழி
செறிக்க வருக திலதநுதல்
தீட்ட வருக மறுகில்விளை
|