பக்கம் எண் :

வாரானைப்பருவம்

57

    யாட வருக மடியிலெடுத்
தணைக்க வருக புதுப்பனிநீர்
ஆட்ட வருக நெறித்தமுலை
அமுதம் பருகவருக முத்தஞ்

சூடவருக உடற்புழுதி
துடைக்க வருக ஒருமாற்றஞ்
சொல்ல வருக தள்ளிநடை
தோன்ற வருக சோதிமணி

மாட நெருங்குந் திருச்செந்தூர்
வடிவேல் முருகா வருகவே
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.

(அ-ரை) விரற்கு ஆழி செறிக்க வருக - விரலில் மோதிரம் நெருக்கிச் சேர்ப்பதற்கு வருவாயாக. நுதல் திலகம் தீட்ட - நெற்றியிற் பொட்டு எழுத. நெறித்த-சிலிர்த்த அமுதம்பருக-பால் குடிக்க. சூட-கொடுக்க. மாற்றம்-மொழி. தள்ளி - நெருக்கி.                                              

(54) 

 இறுகும் அரைஞான் இனிப்பூட்டேன்
இலங்கு மகர குண்டலத்தை
யெடுத்துக் குழையின் மீதணியேன்
இனியுன் முகத்துக் கேற்பஒரு

சிறுகுந் திலதந் தனைத்தீட்டேன்
திருக்கண் மலர்க்கு மையெழுதேன்
செம்பொற் கமலச் சீறடிக்குச்
சிலம்பு திருத்தேன் நெறித்துவிம்மி