58 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
முறுகு முலைப்பால் இனிதூட்டேன்
முகம்பார்த் திருந்து மொழிபகரேன்
முருகா வருக சிவசமய
முதல்வா வருக திரைகொழித்து
மறுகு மலைவாய்க் கரைசேர்ந்த
மழலைச் சிறுவா வருகவே
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.
(அ-ரை) இறுகும் - நெருங்கும்.
இலங்கு - விளங்கு. குழை - காது. சிறுகும் - சிறிதாயிருக்கும். சீறடி - சிறிய அடி பகரேன் -
சொல்லேன். மறுகும் - சுழலும்.
(55)
எள்ளத் தனைவந் துறுபசிக்கும்
இரங்கிப் பரந்து சிறுபண்டி
எக்கிக் குழைந்து மணித்துவர்வாய்
இதழைக்குவித்து விரித்துழுது
துள்ளித் துடிக்கப் புடைபெயர்ந்து
தொட்டில் உதைந்து பெருவிரலைச்
சுவைத்துக் கடைவாய் நீரொழுகத்
தோளின் மகரக் குழைதவழ
மெள்ளத் தவழ்ந்து குறுமூரல்
விளைத்து மடியின் மீதிருந்து
விம்மப் பொருமி முகம்பார்த்து
வேண்டும் உமையாள் களபமுலை
|