பக்கம் எண் :

New Page 1

6

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்

பொதுவர்-வெள்ளியம்பலாவாணர்.  பதயுகம்-இரண்டடிகள். அளி-வண்டு.
குறவனிதை-குறமாது.  விரகம்-வேட்கை.  நிருதர்-இராக்கதர், கழுதுகள்-
பய்கள். அடல்-வலிமை, கொலை.  இடவிய-அகலமான.  பயில்-பொருந்து. 
தருவுக்கிறை-கற்பக தருவின் நிழலில் அரசு புரியும் இந்திரன்.  கொண்கன்-கணவன்.  குரிசில்-நம்பி.  பெருமையிற் சிறந்தவன்-கடிகமழ்-மணம்
வீசுகின்ற.         

(2) 

உமையம்மை

அரிபிரமர் சந்த தம்பு கழ்ந்திடு
பரசுடைய நம்பர் பங்கின் மென்கொடி
அகிலலோகமும் ஆதரத் தாற்ப டைத்தவள்
அரிவைமட மங்டகை மென்க னங்குழை
திரிபுரை அணங்கு கங்கை அம்பிகை
அகளமாய்அனு பூதியிற் பூத்த பொற்கொடி
அபினவை முகுந்தர் தங்கை சுந்தரி
உரகபண பந்தி கொண்ட கங்கணி
அமுதமூறிய பாடலுக் கேற்ற சொற்குயில்
அறுசமய முங்க லந்து நின்றவள்
மறலிபர வும்ப்ர சண்ட சங்கரி
அழகெலாமிது தானெனப் போற்று சித்திர

    முரிபுருவ வஞ்சி திங்கள் தங்கிய
திருமுகம லர்ந்த பைங்க ருங்கிளி
முதல்விபூரணி ஞானவித் தாய்க்கி ளைத்தவள்
முருகுவிரி கொந்த ளம்பி றங்கிய
மணிமவுலி மண்ட லங்கொள் செஞ்சடை
முடிமனோன்மணி வாலைவற் றாக்கு ணக்கடல்
முகிழ்முலை சுமந்து நொந்த சைந்திறும்