பக்கம் எண் :

வாரானைப்பருவம்

61

    விண்டு மாவின் கனிதடத்தின்
மீதோ வீழக் குருகினங்கள்
வருவி இரியக் கயல்வெகுண்டு
வெடிபோய் மீள மண்டூகம்

கண்டு பாய வரிவளை
கழிக்கே பாயக் கழிக்கானற்
கம்புள் வெகுண்டு துண்ணெனக்கட்
கடைதாள் விழித்துத் தன்பார்ப்பைக்

கொண்டு போயக் கருவாளைக்
குலைக்கே பாயக் குடக்கனியின்
குறுங்காற் பலவு வேர்சாய்ந்த
குழிக்கே கோடி கோடிவரி

வண்டு பாயுந் திருச்செந்தூர்
வடிவேல் முருகா வருகவே
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.

(அ-ரை) விண்டு-காம்பாற்று, தடம்-தடாகம், குளம்-வெருவிஇரிய-
அஞ்சியோட. வெடிபோய்-தாவி. மண்டூகம்-தவளை. கழி-உப்பங்கழி. கம்புள்-சம்பங்கோழி. பார்ப்பை-குஞ்சை. குலைக்கே-மணல்மேட்டில் செய்கரையில். குழிக்கே-குழியில்.                                                  

(59) 

 பேரா தரிக்கும் அடியவர்தம்
பிறப்பை ஒழித்தப் பெருவாழ்வும்
பேறுங் கொடுக்க வரும்பிள்ளைப்
பெருமா னென்னும் பேராளா