கொலைபுரி விகட மணிமுடி நிருதர்
குலமற வருக வருகவே
குருமணி வயிரம் இருசிகை நெடிய
குழைபொர வருக வருகவே
மலைமகள் கவுரி திருமுலை பருகு
மழவிடை வருக வருகவே
வளையுமிழ் தரளம் அலையெறி நகரில்
வரபதி வருக வருகவே.
(அ-ரை) கலைதெரி புகலி-கலைகள்
தெளிந்த சீகாழி. கவுணிய-கவுணிய குலத்தில் தோன்றிய திருஞான சம்பந்தனே! கலி-வறுமை. துன்பம்.
சிலை-வில் வனிதையர். அறுவர்-பாலூட்டி வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறுபேர். பொர-மோத.
கவுரி-பார்வதி. வரபதி-மேலான தலைவ!
(61)
அணிநெடு மவுலி எறிசிறு புழுதி
அழகுடன் ஒழுக வருகவே
அடியிடு மளவில் அரைமணி முரலும்
அடியொலி பெருக வருகவே
பணிவிடை புரிய வருமட மகளிர்
பரவினர் புகழ வருகவே
பலபல முனிவர் அனைவரும் உனது
பதமலர் பரவ வருகவே
பிணிமுக முதுகில் அரியணை யழகு
பெறவகு முருக வருகவே
பிறைபொரு சடிலர் தமதிட மருவு
பிடிபெறு களிறு வருகவே
|