பக்கம் எண் :

அம்புலிப்பருவம்

65

    அலையாழி சூழ்திருச் செந்தில்வடி வேலனுடன்
அம்புலீ ஆடவாவே
அரவின்முடி நெளியமயில் முதுகில்வரு குமரனுடன்
அம்புலீ யாடவாவே.

(அ-ரை) நிரம்பாத கலை-குறைந்த சந்திர கலை. நிறை கலி-நிறைந்த கல்விநூல். களங்கம் அருகுஉற-குற்றம் பக்கத்தில் பொருந்த. மான்-முயலகனென்னும் மான். குறமான்-குறப்பெண்ணாகிய வள்ளி. கணம்-தாராகணம். கணத்தொகை-சிவகணத்தின் கூட்டம். துளிஅமுது-அமுதத்துளி. சொல்லமுது-சொல்லாகிய அமுதம். கொலைஆடு-கொலை செய்கின்ற. அராவழிப்பகை-பாம்பினை மூலம் பகைமை. கோள்-வலிமை. மேகாரம்-மயில். அலைஆழி-அலைகடல்.                                                                  

(63)

மாமோக மண்டலம் அகற்றிஅறி வென்னுமுழு
மண்டலத் தைத்தொடுத்து
வடவைமுக மண்டலத் தழலா லுருக்கியினன்
மண்டலத் தூடுபுக்குச்

சோமோத யக்கிரண மண்டலத் தமுதத்
துளித்திவலை பருகியுடலைச்
சோதிமண் டலமென விளக்குமவர் இவனுடைய
துய்யமுக மண்டலத்தை

ஏமோ கருத்துற இருத்திப் பெரும்பரத்
தெல்லைமண் டலமெய்தலாம்
என்றுகொண் டிவன்மண் டலச்சக்ர நிலையா
றெழுத்திலீ டேறுவருனக்