பக்கம் எண் :

அத

அம்புலிப்பருவம்

67

    அதிருமக ராழிசூழ் செந்தில்வடி வேலனுடன்
அன்புடலீ ஆடவாவே
அரவின் முடிநெளியமயில் முதுகில்வரு குமரனுடன்
ஆம்புலீ ஆடவாவே.

(அ-ரை) வரி-கோடு. அலம்பு-முழங்குகின்ற. முகிழ்க்கும்-தோன்றும். அந்தகாரம்-இருள். படலை-தட்டிக்கதவு. வான்-ஆகாயம், உடுக்கள்-நட்சத்திரம். அடுசெரு-கொல்லும் போர். நெளிய-புரள. முடி-தலை.           

(65) 

 வெறியார் இலைத்தொடைத் தக்கனழல் வேள்வியை
வெகுண்டுபகல் பல்லுகுத்து
வெள்ளிவிழி யைக்கொடுத் தயிரா வதப்பாகன்
வேறுருக் கொடுபறக்கச்

செறியா டகத்தகட் டிதழ்முளரி நான்முகன்
சென்னியைத் திருகிவாணி
செய்யதுண் டம்துண்டம் ஆக்கியத் தக்கன்
சிரத்தையொரு வழிப்படுத்திப்

பொறியார் அழற்கடவுள் கைத்தலம் அறுத்துவிண்
புலவர்முப் பத்துமூவர்
போனவழி ஒருவர்போ காமலுன் னுடலையும்
புழுதியில் தேய்த்ததெல்லாம்.

அறியாத தல்லநீ செந்தில்வடி வேலனுடன்
அம்புலீ ஆடவாவே
அரவின்முடி நெளியமயில் முதுகில்வரு குமரனுடன்
அம்புலீ ஆடாவாவே.