70 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
மண்டுவா சுகிதுண்ட மானதோ இன்னமொரு
வாலிக்கு வாலில்லையோ
மதியிலா மதியமே இவன்நினைந் தாலெந்த
வகைசெலா தாகையானீ
அண்டர்நா யகனெங்கள் செந்தில்வடி வேலனுடன்
அம்புலீ ஆடவாவே
அருவரைகள் கிடுகிடென மயில்கடவு முருகனுடன்
அம்புலீ ஆடவாவே.
(அ-ரை) பண்டு-முன். இன்னமுதம்-இனிய
அமுதம். மந்தரம்-மத்தாக விளங்கியமந்தரமலை. அளறு -சேறு. திடர் - மேடு. அமரேசன்-இந்திரன்.
வீடி - இறந்து. வாசுகி-அட்ட நாகங்களில் ஒன்று. துண்டமானதோ-துண்டிக்கப்பட்டதோ வாலி-கிட்கிந்தை
மன்னன்; பாற்கடல் கடைந்தபோது தேவாசுரர்க்கு தவியாயிருந்தவன்; இராமனால் அம்பெய்து
கொல்லாப்பட்டவன் சிவபூசைச்செல்வன்; இராவணனை வாலில் தூக்கிச்சென்று அங்கதன் தொட்டிலிற்
கட்டி விளையாட்டுப் பொம்மையாக்கியவன். மதியிலாமதி - அறிவில்லாத சந்திரனே. வகை-வழி.
(68)
வட்டமா கத்துள்வெளி வடிவுகொள லாலென்று
மானைத் தரித்திடுகையால்
மந்தா கினித்தரங் கத்துவளம் எய்தலால்
மன்னுங் கணஞ்சூதலால்
இட்டமொடு பேரிரவில் வீறுபெற லாலுலகில்
எவருந் துதித்திடுதலால்
இரவின்கண் ணுறுதலால் இடபத்தி லேறாலால்
ஏமமால் வரையெய்தலால்
|