பக்கம் எண் :

New Page 1

அம்புலிப்பருவம்

71

  முட்டமறை வேள்விக் குரித்தாகை யால் வெய்ய
மூரியர வுக்குடைதலால்
முக்கண்ணுமை பங்கனா ரொக்குநீ யென்றுதிரு
முகமலர்ந் துளையழைத்தால்

அட்டபோ கம்பொறுவை செந்தில்வடி வேலனுடன்
அம்புலீ ஆடவாவே
அருவரைகள் கிடுகிடென மயில்கடவு முருகனுடன்
அம்புலீ ஆடவாவே.

(அ-ரை) வட்டம்-பரிவேடம். ஆகத்துள்-சரீரத்துள், வெளிவடிவு - வெள்ளைவடிவு. வெளிவடிவு - ஆகா யரூபம். மாகம்-விண். தரித்திடுதல் - தாங்குதல். மந்தாகினி-கங்கைதரங்கம்-அலை. வளம்-குளிர்ச்சி. கணம்-(1) நட்சத்திரம்; (2) சிவகணம். இரவி கண்ணுறுதலால்-(1) சூரியனிடம் பொருந்துதலால். (2) சூரியன் கண்ணாகப் பொருந்துதல் இடபம்-இடபராசி. இடபவாகனம். பேரிரவில்-பெரிய இரவில்; பெரிய பிச்சாடன வடிவில். ஏமம் - பொன். வேள்வி-யாகம். உடைதலால்- தளர்தலால். அட்டபோகம் - எண்வகைச்செல்வம்.                 

(69) 

காதலால் எறிதிரைக் கடல்மகளிர் சிறுமகார்
கரையிற் குவித்தமுத்தும்
கருவாய் வலம்புரி யுமிழ்ந்தமணி முத்துமுட்
கண்டல்மடல் விண்டசுண்ணத்

தாதலர இளவாடை கொடுவருங் கானல்வெண்
சங்குநொந் தீற்றுளைந்து
தனியே உகுத்தபரு முத்தமுந் தன்னிலே
சதகோடி நிலவெறிக்கும்