தழைசெவி. இலைபோல் விரிந்த காது. துடிஅடி-உடுக்கை போன்ற கால்
புகர்-புள்ளி. ஒருத்தல். ஆண்யானை துங்கம்-உயர்வு. துளைக்கரம்-துவாரம் உடைய கை. வெருவல்-பயப்படாதே:
எதிர்மறை ஒருமை முன்னிலை.
(73)
-----
8. சிறுபறைப்
பருவம்
பொருவாகை சூடுமர வக்கொடிக் குருகுலப்
பூபாலர் ஏறும் அந்தப்
பூபால னுக்கிளைய துணைவர்நூற் றுவரும்
பொருபதினெட் டக்குரோணி
ஒருவாய்மை சொற்றபடை வீரருஞ் செருவினில்
உருத்தெழலும் நீதியைவர்
உடனாக நின்றுபற் குனன்மணித் தேரினுக்
குள்ளசா ரதியாகியம்
மருவார்கள் தானையிற் பட்டவர்த் தனர்மகுட
வர்த்தனர் அடங்கலும்போய்
மயங்கவொரு நாள்விசைய னுக்குவிசை யம்பெருக
மண்ணேழும் உண்டுமிழ்ந்த
திருவாய் வலம்புரி முழக்குதிரு மால்மருக
சிறுபறை முழக்கியருளே
செருவில்எதிர் பொருதபர நிருதர்குல கலகனே
சிறுபறை முழக்கியருளே.
|