பக்கம் எண் :

82

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்

வழுவறு தமிழ்ப்பனுவல் முறைமுறை யுரைத்துவெகு
        வரகவிஞர் உட்குழையவே
    மகபதியு மிக்கமுனி வரர்கணமும் இச்சையுடன்
        வழியடிமை செப்பியிடவே

    பொழுதுதொறும் ஒக்கவிதி முறையுனை அருச்சனைசெய்
        புனிதசிவ விப்ரருடனே
    புகலரிய பத்தசனம் அரகர வெனக்குலவு
        புரவலர் விருப்பமுறவே

    செழுமறை முழக்கவரு முருககும ரக்கடவுள்
        சிறுபறை முழக்கியருளே
    திரளுமணி முத்தையலை யெறியுநக ருக்கதிப
        சிறுபறை முழக்கியருளே.

    (அ-ரை) எழும்இரவி-உதிக்கின்ற சூரியன். மட்க. மழுங்க. வழு-குற்றம். தமிழ்ப்பனுவல்-தமிழ்ப்பாடல். குழை பிடித்த விழி-காதோடளாவும் கண்-மகபதி - மகஞ்செய் தலைவன். செப்பியிட-சொல்ல. சிவவிப்ரர்-சிவப்பிராமணர் புரவலர் - போற்றுகின்றவர், அரசர்.                                     

(81) 

 தவனனிர தப்புரவி வலமுறையில் வட்டமிடு
தருணவட வெற்பசையவே
தமரதிமி ரத்துமிதம் எறியுமக ரப்பெரிய
சலதியொலி யற்றவியவே

    புவனமுழு தொக்கமணி முடிமிசை இருத்துபல
பொறியுரகன் அச்சமுறவே
   புணரியிடை வற்றமொகு மொகுமொகுவெனப்பருகு
புயலுருமு வெட்கியிடவே