பக்கம் எண் :

98

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்

    வீதி மங்கல விழாவணி விரும்பிய
விண்ணவர் அரமாதர்

சோதி மங்கல கலசகுங் குமமுலை
தோய்ந்தகங் களிகூரச்

சாதி மங்கல வலம்புரி இனமெனத்
தழைச்சிறை யொடுபுல்லி

ஓதிமம்குயில் செந்தில்வாழ் கந்தனே
உருட்டுக சிறுதேரே

உரக நாயகன் பஃறலை பொடிபட
உருட்டுக சிறுதேரே.

(அ-ரை) மங்கல கலசகுங்கும மலை-சுபமானகும்பம் போன்ற குங்குமம் அணிந்த கொங்கை, தோய்ந்து-படிந்து புல்லி-தழுவி.                       

(100) 

  விரைத்த டம்பொழில் வரைமணி ஆசனத்
திருந்துவிண் ணவர்போற்றி

வரைத்த டம்புரை மழவிடை எம்பிரான்
மனமகிழ்த் திடவாக்கால்

இரைத்த பல்கலைப் பரப்பொலாந் திரட்டிமற்
றிதுபொரு ளெனமேனாள்

உரைத்த தேசிகா செந்தில்வாழ் கந்தனே
உருட்டுக சிறுதேரே

உரக நாயகன் பஃறலை பொடிபட
உருட்டுக சிறுதேரே.