98 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
வீதி மங்கல விழாவணி விரும்பிய
விண்ணவர் அரமாதர்
சோதி மங்கல கலசகுங் குமமுலை
தோய்ந்தகங் களிகூரச்
சாதி மங்கல வலம்புரி இனமெனத்
தழைச்சிறை யொடுபுல்லி
ஓதிமம்குயில் செந்தில்வாழ் கந்தனே
உருட்டுக சிறுதேரே
உரக நாயகன் பஃறலை பொடிபட
உருட்டுக சிறுதேரே.
(அ-ரை) மங்கல கலசகுங்கும
மலை-சுபமானகும்பம் போன்ற குங்குமம் அணிந்த கொங்கை, தோய்ந்து-படிந்து புல்லி-தழுவி.
(100)
விரைத்த டம்பொழில் வரைமணி ஆசனத்
திருந்துவிண் ணவர்போற்றி
வரைத்த டம்புரை மழவிடை எம்பிரான்
மனமகிழ்த் திடவாக்கால்
இரைத்த பல்கலைப் பரப்பொலாந் திரட்டிமற்
றிதுபொரு ளெனமேனாள்
உரைத்த தேசிகா செந்தில்வாழ் கந்தனே
உருட்டுக சிறுதேரே
உரக நாயகன் பஃறலை பொடிபட
உருட்டுக சிறுதேரே.
|