பக்கம் எண் :

New Page 1

சிறுதேர்ப்பருவம்

99

    (அ-ரை) விரை-வாசனை தடம்-பெரிய, வரைத்தடம் புரை - மூங்கிலையுடைய மலைபோன்ற. மேல்நாள்-மற்காலம், தேசிகன்-குரு.                

(101) 

    மாதுநாயகம் எனைவடி வுடையசீர்
        வள்ளிநா யகமண்ணில்

    ஈது நாயகம் எனவுனை யன்றிவே
        றெண்ணநா யகம்உண்டோ

    போது நாயகன் புணரியின் நாயகன்
        பொருப்புநா யகன்போற்றி

    ஓது நாயக செந்தில்வாழ் கந்தனே
        உருட்டுக சிறுதேரே

    உரக நாயகன் பஃறலை பொடிபட
        உருட்டுக சிறுதேரே.

    (அ-ரை) மாதுநாயகம்-பெண்ணரசி. நாயகம்-தலைமை. போது நாயகன் - பிரமன். புணரியின் நாயகன்-பாற்கடலில் உறங்கும் திருமால் பொருப்பு-மலை. நாயகன்-சிவன்.                                         

(102) 

    தக்க பூசனைச் சிவமறை யோர்பெருந்
        தானநா யகர் தம்பேர்

    திக்க னைத்தினும் எண்முதல் இமையவர்
        தேவர்தந் திருமேனி

    மிக்க மாலினை தருபவர் அடியவர்
        மின்னனார் சமயத்தோர்