நடையழகு கூறி விளித்தது 23. | சுரிகுழல் அசைவுற அசைவுறத் | | துயிலெழும் மயிலென மயிலெனப் பரிபுர ஒலியெழ ஒலியெழப். பனிமொழி யவர்கடை திறமினோ. |
(பொ-நி)பனிமொழியவர்! குழல் அசைவுற அசைவுற, மயில் என மயில் என, ஒலி எழ ஒலி எழ திறமின்; (எ-று)
(வி-ம்.)சுரிதல்-நெளிதல். குழல்-கூந்தல். துயில்-தூக்கம். பரிபுரம்- கிண்கிணி. பனி மொழி - குளிர்ந்த (இனிய) மொழி. குழல் அசைய, பரிபுரம் ஒலிக்க, மயிலென வருபவர் என்க(3) கனவுநிலை கூறி விளித்தது 24. | கூடிய இன்கன வதனிலே | | கொடைநர துங்கனொடு அணைவுறாது ஊடிய நெஞ்சினொடு ஊடுவீர் உமது நெடுங்கடை திறமினோ. | (பொ-நி.) கனவதனிலே, அணைவுறாது, ஊடிய நெஞ்சினொடு ஊடுவீர் திறமின்; (எ-று)
(வி-ம்.) கூடிய - வந்தடைந்த. நரதுங்கன் - குலோத்துங்கன். அணைவுறாது - தழுவிப்புணராது. ஊடிய - பிணங்கிய. நெஞ்சு - மனம். கனவிற் கண்ட குலோத்துங்கனைப் புணராது விட்ட நெஞ்சினை நொந்தன ரென்க. (4) ஊடல்நிலை கூறி விளித்தது 25. | விடுமின் எங்கள்துகில் விடுமின் என்றுமுனி | | வெகுளி மென் குதலை துகிலினைப் பிடிமின் என்றபொருள் விளைய நின்றருள்செய் பெடைந லீர்கடைகள் திறமினோ. | (பொ-நி) "விடுமின்" "விடுமின்" என்று முனிகுதலை, "பிடிமின்" என்ற பொருள் விளைய, அருள் செய் பெடைநலீர், திறமின்; (எ-று) |