பக்கம் எண் :

கடை திறப்பு9


களப்போர்  சொலப்புகும்  தந்நிலை  உரைத்தும், கணவர் பிழை காணாக் காதலியல்  கூறியும்,  உறவாடும்  இயல்பினை  உளங்கொள  உரைத்தும்,
கலவியின்  மயக்க  நிலையினைக்  கூறியும், பிரிவுறு துயர்நிலை நயம்பெற
இயம்பியும்,   கணவரால்   கலிங்கம்  அழித்தது  மொழிந்தும்  செல்வது
பயில்வார்க்குக் கழிபேரின்பம் பயந்து நிற்கின்றது.]

உறுப்புநலங் கூறி விளித்தது

21. சூதளவு அளவெனும் இளமுலைத்
     துடியளவு அளவெனும் நுண்ணிடைக்
காதளவு அளவெனும் மதர்விழிக்
   கடலமு தனையவர் திறமினோ.

     (பொ-நி) இளமுலை,     நுண்ணிடை,     மதர்விழி (உடைய)
அமுதனையவர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.) சூது-சூதாடு  கருவி. துடி- உடுக்கை. இடை-இடுப்பு. காதை
அளாவும் அளவு எனும் மதர்விழி என்க.  கடல் அமுது-திருப்பாற்கடலில்
தோன்றிய  அமிழ்தம்.   இதனை  'அலையிடைப் பிறவா அமிழ்து'  என
இளங்கோவடிகள்  பாராட்டுதல்  அறிக. மதர்-செருக்கு. விழி-கண். முலை,
இடை,    விழிச்   சிறப்புக்கூறியவாறு.  விழி  காதுவரை  நீண்டிருப்பது
நல்லிலக்கணம்.   "காதளவோடிய     கலகபாதகக்     கண்"   என்றார்
்பட்டினத்தடிகளும்.

முலை நலங் கூறி விளித்தது

22.புடைபட இளமுலை வளர்தொறும்
     பொறைஅறி வுடையரும் நிலைதளர்ந்து
இடைபடு வதுபட அருளுவீர்
   இடுகதவு உயர்கடை திறமினோ.

     (பொ-நி) முலைவளர்தொறும்,   அறிவுடையரும்   நிலைதளர்ந்து,
இடைபடுவதுபட  அருளுவீர்  திறமின், (எ-று.)

     (வி-ம்.)புடைபட-பக்கம்  திரண்டு.  பொறை-துன்பம்  பொறுத்தல்,
நிலை  தளர்ந்து - தன்  இயற்கைத்  தன்மை  குன்றி.  இடை - இடுப்பு.
இடைபடுவது - துவள்வது; துன்புறுவது.  பட-பொருந்த.  உயர்கடை இடு
கதவு என இயைக்க. இடு கதவு-தாழிட்ட கதவு. கடை-வாயில். கண்டாரை
வருத்தும் இயல்பு கூறப்பட்டது.                                (2)