பக்கம் எண் :

கடை திறப்பு11


     (வி-ம்.) துகில்-ஆடை. முனிவெகுளி-ஊடலால் வந்த சினம். குதலை-
மழலைச்  சொல். விளைய - உண்டாக. நின்று-அகலாமல் நின்று. பெடை-
பெண் அன்னம். நலீர்-நல்லீர்;  பெண்களே.  துகிலை  'விடுமின்'  என்று
சொல்லி அகலாமல்  நிற்றலின்  'பிடிமின்'  என்று  சொல்லியது போலாம்
என்க. (5)

கனவுநிலை கூறி வி்ளித்தது

26. எனத டங்கஇனி வளவ துங்கனருள்
     எனம கிழ்ந்துஇரவு கனவிடைத்
தனத டங்கள்மிசை நகந டந்தகுறி
    தடவு வீர்கடைகள் திறமினோ.

     (பொ-நி.) கனவிடை "வளவதுங்கன் அருள் அடங்க இனிஎனது" என மகிழ்ந்து நகம் நடந்த குறி தடவுவீர் திறமின். (எ-று)

     (வி-ம்.) அடங்க-முழுதும். வளவதுங்கன்-குலோத்துங்கன்,  தனதடம்-
கொங்கைத்தடம்.  நகம் நடந்த-நகத்தால் உண்டான. குறி-கீற்றுக் குறிகளை.
தடவுதல்-கையால் தொட்டுத் தொட்டுப் பார்த்தல். தடவுதல் நனவில் என்க.
கனவிடைக் கண்ட நகக்குறியை நனவிடை ஆராய்ந்தன ரென்க.  இவ்வாறு
தடவியதற்குக்  காரணம்  கனவுக்கும்  நனவுக்கும்  வேற்றுமை  யறியாமை
என்க. (6)

             
ஊடல் உவகை நிலை கூறி விளித்தது

27. முனிபவர் ஒத்திலராய் முறுவல்கி ளைத்தலுமே
     முகிழ்நகை பெற்றமெனா மகிழ்நர்ம ணித்துவர்வாய்
கனிபவ ளத்தருகே வருதலும் முத்துதிரும்
    கயல்களி ரண்டுடையீர் கடைதிற மின்திறமின்.

     (பொ-நி.) முறுவல்   கிளைத்தலும்,  மகிழ்நர்வாய்   பவளத்தருகே
வருதலும், முத்து உதிரும் கயல்கள் உடையீர் திறமின் (எ-று.)

     (வி-ம்.) முனிபவரொத்து - ஊடல்கொண்டு.  இலராய்  பின்  ஊடல்
நீங்கியவராய்.  முறுவல்- புன்சிரிப்பு. கிளைத்தல்-தோன்றுதல்; உண்டாதல்.
முகிழ்நகை - புன்சிரிப்பு.  மகிழ்நர் - கணவர். மணி - அழகு.  துவர்வாய்-
பவளம்போன்ற  வாய்.  கனி - முதிர்ந்த;  முற்றிய.பவளம்-பவளம்போன்ற
வாய். வருதல் முத்தமிடற்  கென்க.  முத்து - முத்துப் போன்ற   கண்ணீர்.
(மகிழ்ச்சிக் கண்ணீர் என்க)  கயல்-மீன்போன்ற கண். ஊடல் நீங்கக் கண்டு
தலைவன் முத்தமிடற்கு வர, அது கண்டு  மகிழ்ச்சிக்  கண்ணீர் உகுத்தாள்
என்க. (7)