பக்கம் எண் :

100கலிங்கத்துப்பரணி

     தமிழ்நாட்டுக்கு   வடபுறமாதலின்  விந்தம் காளிக்குரியதென்க. புயத்து
இருத்தி - தன்தோள்களில்  வைத்து,  உடைவாள்,  கைவாள். அரை-இடுப்பு.
ஒளிரவைத்து - விளங்கும்படிபூண்டு.                             (13)

யானையேற்றம்

245.ஈரிரும ருப்புடைய வாரணம் உகைத்தே
      இந்திரனெ திர்ந்தவரை வென்றுவரு மேயான்
ஓரிரும ருப்புடைய வாரணம் உகைத்தே
     ஒன்னலரை வெல்வனென அன்னதுப யின்றே.

     (பொ-நி.) "இந்திரன்    வாரணம்  -  உகைத்து  வென்றுவரும்யான்
்வாரணம்` உகைத்து  வெல்வ" னெனப் பயின்று; (எ-று.) 

     (வி-ம்.) ஈர்  இரு  -  இரண்டு  இரண்டு;  நான்கு.  மருப்பு-தந்தம்.
வாரணம் - யானை.  உகைத்து  - ஏறிச் செலுத்தி.  ஒன்னலர்  - பகைவர். 
இந்திரனினும் ஏற்றமுடைமை குறித்தது. அன்னது - யானையேற்றம்.
(14)

குதிரையேற்றம்

246.இற்றைவரை யுஞ்செல வருக்கனொரு நாள்போல்
      ஏழ்பரியு கைத்திரு ளகற்றிவரு மேயான்
ஒற்றைவய மானடவி இத்தரைவ ளாகத்து
     உற்றவிருள் தீர்ப்பனென மற்றதுப யின்றே.

     (பொ-நி.) "அருக்கன்  ஏழ்  பரி   உகைத்து  இருள்  அகற்றிவரும்.
யான் ஒற்றைமா  நடவி  இருள் தீர்ப்பன்"  என  அது  பயின்று; (எ-று.)

     
(வி-ம்.) செலவு  சுற்றிச்  செல்லுதல்,  அருக்கன்  -  ஞாயிறு. பரி -
குதிரை. வயம்-வெற்றி. மான்- குதிரை. நடவி-நடத்திச் செலுத்தி. வளாகம் -
பரந்த இடம். இருள்-துன்ப இருள். பயின்று-கற்று.                 (15)

படைக்கலப் பயிற்சி
 
247.சக்கரமு தற்படையொ ரைந்துமுத னாளே
      தன்னுடைய ஆனவத னாலவை நமக்குத்
திக்குவிச யத்தின்வரு மென்றவை பயிற்றிச்
     செங்கைமலர் நொந்தில சுமந்தில தனக்கே.