பக்கம் எண் :

அவதாரம்101


     (பொ-நி.) படை  ஐந்தும்   தன்னுடைய   ஆன  அதனால் வரும்
என்று, செங்கைமலர்  நொந்தில;  சுமந்தில; (எ-று.)

     (வி-ம்.)   படைஐந்து;    தண்டு,   வில்,  வாள்,  சங்கு,   சக்கரம்,
திருமாலே குலோத்துங்கனாதலின்,  "தன்னுடைய"  வாயின.  திக்கு விசயம்-
திசைதோறும் சென்று   தன்    ஆற்றலை   உணர்த்தல்.  நொந்தில -
வருந்தலில்லை. சுமந்தில -கைக்கொள்ள வில்லை.                  (16)

கலைநூற் பயிற்சி

248. உரைசெய்பல கல்விகளின்உரிமைபல
       சொல்லுவதென் உவமையுரை செய்யின் உலகத்து
அரசருள ரல்லரென அவைபுகழ
     மல்குகலை அவையவைகள் வல்ல பிறகே.
 

     (பொ-நி.)   கல்விகளின்    உரிமை    சொல்லுவதென்   உவமை
உரைசெய்யின்,  அரசர்  உளரல்லர்  என அவைபுகழ, கலை வல்ல பிறகு;
(எ-று.)

     (வி-ம்.) உரைசெய்    -   மேம்பாடாகச்     சொல்லப்படுகின்ற,
வினைத்தொகை. உரிமை-குலோத்துங்கனுக்கு உரிமையாந் தன்மை. உவமை
உரை - ஒப்புரைத்தல். அவை - சபை. அவை அவைகள் -அவ்வவற்றிலும்,
வல்ல-வல்லமைகொண்ட.                                    (17)

இளவரசானமை

249.இசையுடனெ டுத்தகொடி அபயனவ
      னிக்கிவனை இளவரசில் வைத்த பிறகே
திசையரச ருக்குரிய திருவினை
     முகப்பதொரு திருவுளம டுத்தருளியே.
 

     (பொ-நி.)   அபயன்   இளவரசில்   வைத்த   பிறகு,  திருவினை
முகப்பதொரு திரு உளம் அடுத்தருளி; (எ-று.)

     (வி-ம்.) இசை   -  புகழ்.   அபயன்:    இராசேந்திர   சோழன் 
மகனான வீரராசேந்திரன். அவனி-உலகு. இள அரசு -இளவரசுப் பட்டம்.
திரு-செல்வம். முகத்தல் -  கொள்ளை கொள்ளுதல்.  திரு உளம் - உயர்
எண்ணம். அடுத்து அருளி - உண்டாகி.                        (18)