போர்மேற் சென்றமை 250. | வளர்வதொர் பதத்தினிடை மதகரி | | முகத்தினிடை வளையுகிர் மடுத்து விளையாடு இளவரியெ னப்பகைஞர் எதிர்முனைக ளைக்கிழிய எறிபடை பிடித்த ருளியே. |
(பொ-நி.) மதகரி முகத்தினிடை விளையாடு இள அரிஎன, முனைகளைக் கிழிய, எறிபடை பிடித்தருளி ;(எ-று.) (வி-ம்.) வளர்வதொர் பதம் -வளரும் இளம்பருவம். கரி-யானை. உகிர்-நகம். இள அரி-சிங்கக்குட்டி, முனை - போர்முனை. கிழிய - அழிய. எறிதல் - சொல்லுதல். முனைகளை எறிபடை ; கிழிய எறிபடை என இயைக்க, படை -போர்க்கருவி. (19) வடவரசரை வெற்றிகொண்டது 251. | குடதிசை புகக்கடவு குரகதர | | தந்திரவி குறுகலும் எறிக்கு மிருள்போல் வடதிசை முகத்தரசர் வருகதமு கத்தனது குரகதம் உகைத்த ருளியே. |
(பொ-நி.) இரவி குறுகலும் எறிக்கும் இருள் போல், அரசர் வருகதம் உக. தனது குரகதம் உகைத்தருளி; (எ-று.) (வி-ம்.) குடதிசை - மேல்திசை. கடவுதல் -செலுத்தல். குரகதம்- குதிரை.ரதம்-தேர், இரவி-ஞாயிறு குறுகலும்-கீழ்த்திசையை அணைதலும். எறிக்கும் - அழிக்கப்படும். வடதிசைமுகம் - வடக்குத் திக்கினிடம். கதம்- வெகுளி. மேல்திசை நோக்கிய ஞாயிறுகண்டழியும் இருள்போல், வடதிசை நோக்கிய குலோத்துங்கனைக் கண்டழிந்தனர் வடவர் என்க. (20) வயிராகரம் எரிமடுத்தது 252. | புரமெரிம டுத்தபொழுது அதுவிது | | வெனத்திகிரி புகையெரிகு விப்ப வயிரா கரமெரிம டுத்தரசர் கரமெதிர் குவிப்பதொரு கடவரைத னைக்க டவியே, |
|