பக்கம் எண் :

102கலிங்கத்துப்பரணி

போர்மேற் சென்றமை

250. வளர்வதொர் பதத்தினிடை மதகரி
      முகத்தினிடை வளையுகிர் மடுத்து விளையாடு
இளவரியெ னப்பகைஞர் எதிர்முனைக 
     ளைக்கிழிய எறிபடை பிடித்த ருளியே.

     (பொ-நி.)  மதகரி   முகத்தினிடை   விளையாடு   இள  அரிஎன,
முனைகளைக் கிழிய, எறிபடை பிடித்தருளி ;(எ-று.)

     (வி-ம்.)  வளர்வதொர்  பதம் -வளரும் இளம்பருவம்.  கரி-யானை.
உகிர்-நகம். இள அரி-சிங்கக்குட்டி, முனை - போர்முனை. கிழிய - அழிய.
எறிதல் - சொல்லுதல்.  முனைகளை  எறிபடை ;  கிழிய  எறிபடை  என
இயைக்க, படை -போர்க்கருவி.                                (19)

வடவரசரை வெற்றிகொண்டது

251.குடதிசை புகக்கடவு குரகதர
      தந்திரவி குறுகலும் எறிக்கு மிருள்போல்
வடதிசை முகத்தரசர் வருகதமு
     கத்தனது குரகதம் உகைத்த ருளியே.

     (பொ-நி.)  இரவி  குறுகலும்   எறிக்கும்  இருள்  போல்,  அரசர்
வருகதம் உக. தனது குரகதம் உகைத்தருளி; (எ-று.)

     (வி-ம்.)  குடதிசை - மேல்திசை.  கடவுதல் -செலுத்தல்.  குரகதம்-
குதிரை.ரதம்-தேர்,  இரவி-ஞாயிறு  குறுகலும்-கீழ்த்திசையை அணைதலும்.
எறிக்கும் - அழிக்கப்படும். வடதிசைமுகம் - வடக்குத் திக்கினிடம். கதம்-
வெகுளி.   மேல்திசை நோக்கிய    ஞாயிறுகண்டழியும்   இருள்போல்,
வடதிசை நோக்கிய குலோத்துங்கனைக் கண்டழிந்தனர் வடவர் என்க.
                                                        (20)

வயிராகரம் எரிமடுத்தது

252.புரமெரிம டுத்தபொழுது அதுவிது
      வெனத்திகிரி புகையெரிகு விப்ப வயிரா
கரமெரிம டுத்தரசர் கரமெதிர்
     குவிப்பதொரு கடவரைத னைக்க டவியே,