பக்கம் எண் :

அவதாரம்99


பூணூல் அணிந்தமை

242.திருமார்பின் மலர்மடந்தை திருக்கழுத்தின்
    மங்கலநா ணென்ன முந்நூற்
பெருமார்பின் வந்தொளிரப் பிறப்பிரண்டா
   வதுபிறந்து சிறந்த பின்னர்.

     (பொ-நி.)  மார்பின்   மங்கல   நாண்   என்ன,  முந்நூல்  ஒளிர,
இரண்டாவது பிறப்பும் பிறந்து சிறந்த பின்னர்; (எ-று.)

     (வி-ம்.) திரு - அழகு.  மலர் மடந்தை - திருமகள். மங்கல  நாண்
- தாலிக்கயிறு.  முந்நூல் - பூணூல்.  பூணூல் அணிந்த  பின் இரண்டாவது
பிறப்பாம் என்க.                                             (11)

மறை பயின்றமை

.243. போதங்கொள் மாணுருவாய்ப் புவியிரந்த
    அஞ்ஞான்று புகன்று சென்ற
வேதங்கள் நான்கினையும் வேதியர்பால்
   கேட்டருளி மீண்டு கற்றே.

     (பொ-நி.) மாண் உருவாய், புகன்று சென்ற வேதங்கள்நான்கினையும், கேட்டருளிக் கற்று, (எ-று.)

     (வி-ம்.)போதம் - அறிவு;  மாண்  உரு - பிரமசாரி  உரு.  புவி
இரந்த - உலகை ஏற்று வாங்கிய.                              (12)

உடைவாள் ஏந்தல்

244.நிறைவாழ்வைப் பெறல்தமக்கும் அணித்தென்று
    நிலப்பாவை களிப்ப விந்தத்
துறைவாளைப் புயத்திருத்தி உடைவாளைத்
   திருவரையின் ஒளிர வைத்தே.

      (பொ-நி.) நிலப்பாவைகளிப்பு, விந்தத்து  உறைவாளைப்  புயத்து
இருத்தி; உடைவாளை அரையின் வைத்து. (எ-று.)

     (வி-ம்.)  நிறைவாழ்வு -  குறைவற்ற   வாழ்க்கை.   நிலப்பாவை -
மண்மகள்;  அணித்து -  அருகில்  உளது. விந்தத்து  உறைவாள் - காளி,
ஊருக்கு  வடக்கே காளி  கோயில்  போல்,