பக்கம் எண் :

98கலிங்கத்துப்பரணி

     (பொ-நி.)  மாயன்  இவன்  என்று  தெளிவெய்த,  ஐம்படைதரித்து;
(எ-று.)

     (வி-ம்.) நிலமாது - மண்மகள். படர் - துன்பம். மாயன் - (திருமால்)
கண்ணன். தண்டு -  தடி.  தனு  - வில்.  வாள் -  வாட்படை.  பணிலம் -
சங்கு. நேமி - சக்கரம். தன் - திருமாலின். ஐம்படை -  ஐம்படைத்தாலி. (8)

குலோத்துங்கன் நடைபயின்றமை      

240.சினப்புலிவ ளர்ப்பதொர்
    சிறுப்புலியு மொத்தே
திசைக்களிற ணைப்பதொர்
   தனிக்களிறு மொத்தே
அனைத்தறமும் ஒக்கஅடி
   வைக்கஅடி வைத்தே
அறத்தொடும றத்துறை
   நடக்கநடை கற்றே.

     (பொ-நி.)  புலியும்  ஒத்து;  களிறும்  ஒத்து,   அறம்  அடிவைக்க
அடிவைத்து, மறத்துறை நடக்க நடைகற்று. (எ-று.)

     (வி-ம்.) சிறுப்புலி  -  புலிக்குட்டி. அணைப்பது -  தழுவிவளர்ப்பது.
ஒக்க -  குலோத்துங்கனோடு  ஒரு  சேர.  மறத்துறை - வீரச் செயல்களின் 
பகுதிகள். நடக்க-உலகத்தே  நடக்க, நடைகற்று - நடக்கப் பழகி.       (9)

மழலை மொழிந்தது     

241.தாயர்தரு பால்முலை சுரக்கவரு நாளே
    தானுமுல கத்தவர் தமக்கருள் சுரந்தே
தூயமனு வுஞ்சுருதி யும்பொருள் விளங்கிச்
   சொற்கடெ ரியத்தனது சொற்கடெரி வித்தே.

     (பொ-நி.) முலை சுரக்கவருநாள், அருள் சுரந்து, மனுவும் சுருதியும் விளங்கித்தெரிய, சொற்கள் தெரிவித்து. (எ-று.)

     (வி-ம்.)  சுரக்க   வருநாள்  -  பாலருந்தும்   பருவம்,  சுருதி -
மறை,   மழலைப்பருவத்தே    மொழிந்த    சொற்களிலும்   மனுநூல்,  மறைநூல்  அரும்பொருள் தோன்றின என்க.                     (10)