(பொ-நி.) மழை பொழிய; அதுகண்டு, தேவி, குல மகனைக் கையால் எடுத்துக் கொண்டு; (எ-று.) (வி-ம்.)அலர் - மலர். தேவி - மனைவி. குலமகள் - தன் சிறந்த மகள்(அம்மங்கை.) கோகனதம் -தாமரை. (5) பாட்டியார் மொழிந்தது 237. | அவனிபர்க்குப் புரந்தரனு அடையாளம் | | அவயவத்தின் அடைவே நோக்கி இவனெமக்கு மகனாகி இரவிகுலம் பாரிக்கத் தகுவன் என்றே. |
(பொ-நி.) அடையாளம் நோக்கி, "மகனாகி இரவிகுலம் பாரிக்கத்தகுவன்" என்று. (எ-று.) (வி-ம்.) அவனிபர் - அரசர், புரந்தரன் - இந்திரன், அடைவு-வரிசை. எமக்கு-சோழ குலத்தினராகிய எமக்கு. இரவி -ஞாயிறு. பாரித்தல்-வளர்த்தல். (6) இருகுலத்தோரும் மகிழ்ந்தது 238. | திங்களினி ளங்குழவி செம்மலிவ னென்றுஞ் | | செய்யபரி திக்குழவி ஐயனிவ னென்றுந் தங்களின்ம கிழ்ந்திருகு லத்தரசர் தாமுந் தனித்தனி உவப்பதொர் தவப்பயனு மொத்தே. |
(பொ-நி.) இருகுலத்தரசரும் திங்களின் இளங்குழவி என்றும், பரிதிக்குழவி என்றும் மகிழ்ந்து உவப்பதோர் தவப் பயன் ஒத்து; (எ-று.) (வி-ம்.)இருகுலம்; தாய்தந்தையர் குலம்.தங்களின் மகிழ்ந்து - தமக்குள் களிப்புற்று. தவப்பயனுக் கேற்பவே புதல்வர் பிறத்தலால்,அத் தவப்பயனையே உவமை கூறினார். (7) ஐம்படைத்தாலி அணிந்தமை 239. | பண்டுவசு தேவன்மக னாகிநில மாதின் | | படர்களையும் மாயனிவ னென்றுதெளி வெய்தத் தண்டுதனு வாள்பணிலம் நேமியெனு நாமத் தன்படைக ளானதிரு ஐம்படைத ரித்தே. |
|