பக்கம் எண் :

104கலிங்கத்துப்பரணி

குலோத்துங்கன் விளக்கமும் பகைவர் அழிவும்

255. சரிக ளந்தொறுந் தங்கள்ச யமகள்
       தன்னை மன்னப யன்கைப் பிடித்தலும்
பரிக ளுங்களி றுந்தன ராசியும்
     பாரி போகங்கொ டுத்தனர் பார்த்திபர்.

     (பொ-நி.)  சயமகள்  தன்னை அபயன்கைப் பிடித்தலும், பார்த்திபர்
பாரி போகம் கொடுத்தனர் ; (எ-று.)

    
 (வி-ம்.)  சரிதல் -குலைந்து பின்னிடுதல். தங்கள்-பகையரசர் தங்கள்.
சய மகள்  -  வெற்றி   மகள்.   கைப்பிடித்தல்  -  திருமணம்   புரிதல்.
தனராசி - பொருட்குவியல். பாரி போகம்-சீதனம் (பாரி-மனைவி. போகம்-
இன்பநுகர்ச்சிப் பொருள்கள்)   தாம்   வளர்த்த  மகளைக்  கொடுத்தோர்
சீதனமும்  உடன் கொடுத்தனர் என்க. (24)

இதுவும் அது

256.பொருத ராதிபர் கண்கள் சிவந்தில
      போரி லோடிய கால்கள் சிவந்தன
விருத ராச பயங்கரன் செங்கையில்
     வேல்சி வந்தது கீர்த்தி வெளுத்ததே.

     (பொ-நி.)   பொருதராதிபர்    கண்கள்    சிவந்தில; கால்கள்
சிவந்தன; செங்கையில்  வேல்சிவந்தது;  கீர்த்தி  வெளுத்தது;  (எ-று.)

     (வி-ம்.)   தராதிபர்  -  அரசர்.   போரில்   -   போர்க்களத்தில்.
விருதராசபயங்கரன்; குலோத்துங்கன்,    வேல்சிவந்தது  -  பகைவரைக் கொன்றமையால்   வேல் குருதிபடிந்து   செந்நிற    மேற்றது.   கீர்த்தி
வெளுத்தது என்றது, அதனால் அவன் பரந்த  புகழ்  களங்கமற்றதாதலால்
அதனை   வெண்மை   நிறமாகக்  கூறுதல் சான்றோர் மரபு. ஆதலால்,
ழுவெளுத்தது ' என்றார்.                                     (25)

வீரராசேந்திரன் இறந்தமை

257.மாவுகைத் தொருதனி அபயன் இப்படி
      வடதிசை மேற்செல மன்னர் மன்னவன்
தேவருக் கரசனாய் விசும்பின் மேற்செலத்
     தென்றிசைக் குப்புகுந் தன்மை செப்புவாம்.