(பொ-நி.) அபயன் வடதிசைமேற் செல, மன்னர் மன்னவன் விசும்பின் மேற் செல, தென்றிசைக்குப் புகுந்தன்மை செப்புவாம் ; (எ-று.)
(வி-ம்.) மா - குதிரை. அபயன் - குலோத்துங்கன். மன்னர் மன்னவன் - வீரராசேந்திரன் (இராசேந்திரன் மகன்.) விசும்பின் மேற்செல - இறந்தான் என்றபடி. தென்திசை - சோழநாடு. (26) சோழநாடு அரசிழந்த இயல் 258. | மறையவர் வேள்வி குன்றி | | மனுநெறி யனைத்தும் மாறித் துறைகளோ ராறும் மாறிச் சுருதியும் முழக்கம் ஓய்ந்தே. |
(பொ-நி.) வேள்வி குன்றி, மனுநெறி மாறி, துறைகள் ஆறும் மாறி, சுருதியும் ஓய்ந்து. (எ-று.) (வி-ம்.) துறைகள் ஆறு - சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோபிசிதம், சோதிடம், சுருதி-மறை. (27) இதுவும் அது 259. | சாதிக ளொன்றோ டொன்று | | தலைதடு மாறி யாரும் ஓதிய நெறியி னில்லாது ஒழுக்கமும் மறந்து போயே. |
(பொ-நி.) சாதிகள் தலைதடுமாறி, யாரும் நெறியில் நில்லாது ஒழுக்கமும் மறந்துபோய், (எ-று.) (வி-ம்.) தலைதடுமாறுதல், கண்டவாறு கலத்தல், ஓதிய நெறி- நூல்களில் கூறப்பட்ட ஒழுக்கவகைகள். (28) இதுவும் அது 260. | ஒருவரை யொருவர் கைம்மிக்கு | | உம்பர்தங் கோயில் சோம்பி அரிவையர் கற்பின் மாறி அரண்களு மழிய ஆங்கே, |
|