(பொ-நி.) ஒருவரை ஒருவர் கைம்மிக்குக் கோயில் சோம்பி, அரிவையர்கற்பின் மாறி, அரண்கள் அழிய ; (எ-று.)
(வி-ம்.) கைம்மிகுதல் - கீழ்ப்படுத்து மேம்படல். உம்பர் - கடவுளர் சோம்புதல்: பூசையின்றி அவிந்துகிடத்தல்; அரிவையர் - பெண்கள். அரண்: அவ்வவர் நிற்றற்குரிய ஒழுக்கவரம்பு. (29) குலோத்துங்கன் சோழநாடு எய்தியமை 261. | கலியிருள் பரந்த காலைக் | | கலியிருள் கரக்கத் தோன்றும் ஒலிகடல் அருக்க னென்ன உலகுய்ய வந்து தோன்றி, |
(பொ-நி.) இருள் பரந்த காலை, இருள் கரக்கத் தோன்றும் அருக்கன்என்ன வந்து தோன்றி; (எ-று.)
(வி-ம்.)கலி - துன்பம். பரந்த காலை - பரவிய காலத்தில். ஒலி- ஓசையுடைய. கரத்தல் - மறைதல். அருக்கன் - ஞாயிறு. உய்ய- பிழைக்கும்படி. (30) நாட்டை நிலைபெறுத்தியது 262. | காப்பெலாம் உடைய தானே | | படைப்பதும் கடனாக் கொண்டு கோப்பெலாம் குலைந்தோர் தம்மைக் குறியிலே நிறுத்தி வைத்தே, |
(பொ-நி.) தான் கடனாகக் கொண்டு குலைந்தோர் தம்மைக் குறியிலேநிறுத்தி வைத்து; (எ-று.)
(வி-ம்.) காப்பு - உலகைக் காத்தல். கோப்பு-நிற்கவேண்டிய நடைமுறை. குறி - நிற்கவேண்டிய நிலை. நிறுத்திவைத்து நிலைபெறச் செய்து. (31) குலோத்துங்கன் மங்கலநீராடியது 263. | விரிபுனல் வேலை நான்கும் | | வேதங்கள் நான்கு மார்ப்பத் திரிபுவ னங்கள் வாழ்த்தத் திருஅபி டேகஞ் செய்தே, |
|