(பொ-நி.) வேலை நான்கும் வேதங்கள் நான்கும் ஆர்ப்பப்புவனங்கள் வாழ்த்த அபிடேகம் செய்து, (எ-று.) (வி-ம்.) விரிபுனல் - நீர்ப்பரப்பு வேலை-கடல். திரு அபிடேகம்- மங்கல நீராட்டு. புவனம்-உலகம். ஆர்ப்ப-முழங்க. (32) மறையவர் முடிசூட்டியது 264. | அறைகழலரச ரப்பொழுது | | அடிமிசை யறுகெ டுத்திட மறையவர் முடியெ டுத்தனர் மனுநெறி தலையெ டுக்கவே. |
(பொ-நி.) அரசர் அறுகு எடுத்திட, மனு நெறி தலை எடுக்க, மறையவர் முடி எடுத்தனர், (எ-று.) (வி-ம்.) அறைகழல் - ஒலிக்கின்ற வீரகண்டை. அடிமிசை-கால்களின் மீது. அறுகு எடுத்திட - அறுகு இட்டு. வாழ்த்த. முடி: குலோத்துங்கனுக்குச் சூட்டும் முடி. தலை எடுக்க-மேலோங்க. (33) முடிபுனை நீர் ஆட்டுதல் 265. | நிரைமணி பலகு யிற்றிய | | நெடுமுடி மிசைவி திப்படி சொரிபுன லிடைமு னைத்தன துறைகளின் அறம னைத்துமே. |
(பொ-நி.) முடிமிசை சொரிபுனலிடை அறம் அனைத்தும் முளைத்தன, (எ-று.) (வி-ம்.) நிரைமணி - வரிசையாகிய இரத்தினம். குயிற்றிய -பதித்த. புனல் - நீர், அறத்துறை அனைத்தும் என இயைக்க. முளைத்தன - தோன்றலாயின. (34) புலிக்கொடி எடுத்தமை 266. | பொதுவற வுலகு கைக்கொடு | | புலிவளர் கொடியெ டுத்தன அதுமுதற் கொடியெ டுத்தலும் அமரர்தம் விழவெ டுக்கவே. |
|