(பொ-நி.) புலிவளர் கொடி எடுத்தலும், அமரர்கள் கொடி எடுத்தன; (எ-று.) (வி-ம்.) பொது அற - பொது அன்றாகிக் குலோத்துங்கற்கே உரிமையாக. கைகொடு - கைப்பற்றிக்கொண்டு. அமரர்கள் கொடி- கடவுளர்க்கு விழாவின் பொருட்டு எடுக்கும் கொடி. (கோயிலுள் பூசையும் விழாவும் பொலியத் தொடங்கின என்க.) (35) கொற்றக்குடை கவித்தமை 267. | குவிகைகொ டரசர் சுற்றிய | | குரைகழல் அபயன் முத்தணி கவிகையின் நிலவெ றித்தது கலியெனு மிருளொ ளித்ததே. |
(பொ-நி.) அபயன் கவிகையின் நிலவு எறித்தது, கலிஎனும் இருள் ஒளித்தது; (எ-று.) (வி-ம்.) குவிகை - வணங்கிய கை. குரைத்தல் - ஒலித்தல். கவிகை - வெண்கொற்றக்குடை. நிலவு எறித்தது - ஒளி வீசியது. கலி- துன்பம். இருள் ஒளித்தது-இருட்டு நீங்கிற்று. (36) இதுவும் அது 268. | அரனுறை யும்படி மலைகள் | | அடையவி ளங்கின அனையோன் ஒருதனி வெண்குடை உலகில் ஒளிகொள் நலந்தரு நிழலில். |
(பொ-நி.) அனையோன் வெண்குடை ஒளிகொள் நிழலில், மலைகள் அடைய, அரன் உறையும்படி விளங்கின, (எ-று.) (வி-ம்.) அரன் - சிவன். உறையும்படி - இருக்குமாறு. அடைய: எல்லாம் என்றபடி. விளங்கின: வெண்ணிறம் பொருந்தி (வெள்ளிக் குன்றுபோல்) விளங்கின என்க. அனையோன் - அத்தன்மையோனான: குலோத்துங்கன். ஒளி-வெள்ளொளி. (37) குலோத்துங்கன் புகழ் மேம்பாடு 269. | அரிதுயி லும்படி கடல்கள் | | அடையவி ளங்கின கவினின் ஒருகரு வெங்கலி கழுவி உலவுபெ ரும்புகழ் நிலவில். |
|