பக்கம் எண் :

110கலிங்கத்துப்பரணி

     
இதுவும் அது

272.பரிசில் சுமந்தன கவிகள்
      பகடுசு மந்தன திறைகள்
அரசு சுமந்தன இறைகள்
     அவனி சுமந்தன புயமும்.

     (பொ-நி.)  கவிகள்  பரிசில் சுமந்தன;  திறைகள்  பகடு  சுமந்தன;
அரசு இறைகள் சுமந்தன; புயம் அவனி சுமந்தன; (எ-று.)

     (வி-ம்.) பரிசில் - அன்புக்கொடை.  கவி - புலவோர்;  நாற்கவிகள்.
பகடு - எருது.  திறை - பகையரசர்  இடுவது.  அரசு - சிற்றரசர்.  இறை-
குலோத்துங்கன்     கீழ்       இருந்து    அரசாள்வோர்    அளிக்கும்
இறைப்பொருள்.  அவனி - உலகம்.   புயம்- குலோத்துங்கன் தோள்கள்.
(41)

இதுவும் அது

273.விரித்த வாளுகிர்வி ழித்த ழற்புலியை
      மீது வைக்கஇம யத்தினைத்
திரித்த கோலில்வளை வுண்டு நீதிபுரி
     செய்ய கோலில்வளை வில்லையே

     (பொ-நி.)    புலியை      வைக்க    இமயத்தினைத்    திரித்த
கோலில்வளைவுஉண்டு; நீதிபுரி கோலில் வளைவு இல்லை. (எ-று.)

     (வி-ம்.)  வாள்  -  ஒளி.   உகிர் - நகம்.  தழல்-நெருப்பு.  மீது-
இமயத்தின்மீது. கோல் - செண்டு. செய்ய கோல் - செங்கோல்.  வளைவு
இல்லை-கோட்டம் இல்லை.
(42)

இதுவும் அது

274.கதங்க ளிற்பொருதி றைஞ்சி டாவரசர்
      கால்க ளில்தளையு நூல்களின்
பதங்க ளில்தளையு மன்றி வேறொரு
     பதங்க ளில்தளைக ளில்லையே.

     (பொ-நி.)     இறைஞ்சிடா    அரசர்   கால்களில்    தளையும்,
பதங்களில் தளையும்,   அன்றி,   வேறொரு   பதங்களில்    தளைகள்
இல்லை, (எ-று.)