(வி-ம்.) கதம் - சினம். பொருது - போர்செய்து. இறைஞ்சுதல் - வணங்குதல். அரசர் - பகையரசர். தளை - விலங்கு. நூல்-செய்யுள் நூல். பதம் - சொல். தளை - வெண்டளை முதலியன. பதம் - இடம். தளை- சிறைசெய்தல் முதலியன. (43) இதுவும் அது 275. | மென்க லாபமட வார்கள் சீறடி | | மிசைச்சி லம்பொலிவி ளைப்பதோர் இன்க லாம்விளைவ தன்றி எங்குமொர் இகல்க லாம்விளைவ தில்லையே. |
(பொ-நி.) மடவார்கள் சிலம்பொலி விளைப்பதோர் இன்கலாம் விளைவதன்றி, இகல்கலாம் விளைவதில்லை; (எ-று.) (வி-ம்.) கலாபம்-மயில். இன்கலாம் - இனிய மாறுபாடு; (சிலம்பின் பரல் பலவும் ஒரே ஓசை உண்டாக்குமாறு ஒலிக்காமல் தாம்பல என்பதைக் காட்டிச் சற்று முன் பின்னாக ஒலித்தல்.) இகல்கலாம்-பகையால் எழும் பூசல். (44) குலோத்துங்கன் பொழுது போக்கு 276. | வருசெருவொன் றின்மையினான் மற்போருஞ் | | சொற்புலவோர் வாதப் போரும் இருசிறைவா ரணப்போரும் இகன்மதவா ரணப்போரும் இனைய கண்டே, |
(பொ-நி.)செரு இன்மையினான,் மற்போரும், வாதப் போரும், சிறைவாரணப்போரும், மதவாரணப்போரும் இனைய கண்டு, (எ-று.) (வி-ம்.) செரு-போர். இன்மையினான் - இல்லாததால். வாதப்போர்- சொல்லப்பட்ட மாறுபாடு. சிறைவாரணம்-கோழி. மதவாரணம் - யானை. (45) இதுவும் அது 277. | கலையினொடும் கலைவாணர் கவியினொடும் | | இசையினொடும் காதல் மாதர் முலையினொடும் மனுநீதி முறையினொடும் மறையினொடும் பொழுது போக்கி, |
|