பக்கம் எண் :

அவதாரம்113


 குலோத்துங்கன் புறப்பாடு

280.அழகின்மே லழகுபெற அணியனைத்தும்
      அணிந்தருளிக் கணித நூலிற்
பழகினார் தெரிந்துரைத்த பழுதறுநாட்
     பழுதற்ற பொழுதத்து ஆங்கே.

     (பொ-நி.)   அணி    அனைத்தும்   அணிந்தருளிக்,   கணிதநூல்
பழகினார் உரைத்த பழுதறுநாள் பழுதற்ற பொழுதத்து; (எ-று.)

    
 (வி-ம்.)  அழகின்மேல் -  இயற்கையான தன் உடலழகுக்கு மேலும்.
அணி  - அனைத்தும்  அழகுபெற அணிந்தருளி என இயைக்க, அணிகள்
அழகுபெற்று விளங்குமாறு  அவற்றை அணிந்தான் என்க.  கணித நூல்-சோதிடநூல்.  பழுது அறுநாள்  - குற்றமற்ற  நல்ல  நாள்.  பொழுதத்து-
பொழுதின்கண்.                                          (49)

இதுவும் அது

281. அனக தானமறை வாணர்பலர் நின்று பெறவே
       அபய தானம்அப யம்புகுது மன்னர் பெறவே
கனக தானம்முறை நின்றுகவி வாணர் பெறவே
     கரட தானம்மத வாரணமு மன்றுபெறவே.

     (பொ-நி.)  மறைவாணர்  அனகதானம்  பெற, மன்னர் அபயதானம்
பெற. கவிவாணர் கனகதானம் பெற, வாரணம் கரடதானம் பெற; (எ-று.)

     (வி-ம்.) அகம்-பாவம்; அனகம்-பாவமற்றது. மறைவாணர் -அந்தணர்.
அபயதானம்-அஞ்சல் அளித்தல்.  அபயம்-அடைக்கலம்.  புகுது  மன்னர்-
அடைகின்ற   வேந்தர்கள்.  தானம்-பொன்தானம். முறைநின்று-தகுதியாக.
கரடதானம் - மதம்பாயும் இடம். மதவாரணம் - மதங்கொண்ட  யானைகள்.
யானைகளிப்பு மிகுந்தன என்க.                             (50)

 யானை மேற்கொண்டது

282. மற்ற வெங்கட களிற்றின் உதயக்கி ரியின்மேல்  
       மதிக வித்திட உதித்திடும் அருக்க னெனவே
கொற்ற வெண்குடைக விப்பமிசைகொண்டு கவரிக்
     குலம திப்புடைக வித்தநில வொத்து வரவே.