(பொ-நி.) மதிகவித்திட உதித்திடும் அருக்கன் என குடைகவிப்ப, களிற்றின்மிசை கொண்டு, கவரி நிலவு ஒத்துவர. (எ-று.) (வி-ம்.) கடம் - மதம். உதயக்கிரி-தோன்றும் மலை, மதிகவித்திட- சந்திரன் சூழ்ந்துகொண்டிருக்க. அருக்கன் - ஞாயிறு. களிற்றின் மிசைகொண்டு என இயைக்க. கவரிக்குலம் -வெண்சாமரைக் கூட்டம். மதிப்புடை-சந்திரனின் இருபக்கங்களினும். கவித்த-கவிந்துகொண்டிருக்கின்ற. நிலவு - நிலாவொளி. வெண்கொற்றக்குடைநிலாவையும், வெண்சாமரைகள் நிலவொளியையும் ஒத்தன என்க. (51) பல்வகை இயங்களின் முழக்கொலி 283. | ஒருவ லம்புரி தழங்கொலி முழங்கி யெழவே | | உடன்மு ழங்குபணி லம்பல முழங்கி யெழவே பருவம் வந்துபல கொண்டல்கண் முழங்கி யெழவே பலவி தங்களொடு பல்லிய முழங்கி யெழவே. |
(பொ-நி.) வலம்புரி எழ, பணிலம்பல எழ, கொண்டல்கள் எழு (வதுபோல) பல்லியம் எழ; (எ-று.) (வி-ம்.) வலம்புரி - வலம்புரிச்சங்கு. தழங்கு ஒலி -ஒலிக்கும் ஓசை. பணிலம்-சங்கு. கொண்டல்-மேகம். எழவே-எழுதலையேபோல. பல் இயம் - பல்வகை இசைக்கருவிகள். பருவம் வந்து - கார்காலம் வர. கொண்டல் -மேகம். பலவிதங்களொடு முழங்கி என இயைக்க. (52) பிறபல ஒலி முழக்கம் 284. | மன்னர் சீர்சய மிகுத்திடை விடாத வொலியும் | | மறைவ லாளர்மறை நாள்வயின் வழாதவொலியும் இன்ன மாகடன் முழங்கிஎழு கின்ற வொலியென்று இம்பர் உம்பரறி யாதபரி செங்கு மிகவே. |
(பொ-நி.) சீர்சயம் மிகுத்து மன்னர் இடைவிடாத ஒலியும், மறைவலாளர் மறைவழாத ஒலியும், இன்னகடல் ஒலி என்று அறியாத பரிசு, மிக; (எ-று.) |