(வி-ம்.) சீர்சயம் மிகுத்து - குலோத்துங்கனுடைய சிறப்பையும் வெற்றியையும் மிகுத்து. மறைவலாளர் - அந்தணர். நாள்வயின் மறை என இயைக்க; நாள்தோறும் ஓதத்தக்க மறை என்க. இன்னமாகடல்- இவ்வகையான பெரிய கடல்தான். இம்பர் - இவ்வுலகத்தார், உம்பர் - விண்ணுலகத்தார். பரிசு-தன்மை. (53) ஏழிசை வல்லபி உடனிருந்தமை 285. | வாழி சோழகுல சேகரன் வகுத்த இசையின் | | மதுர வாரியென லாகுமிசை மாத ரிதெனா ஏழு பாருலகொ டேழிசை வளர்க்க வுரியாள் யானை மீதுபிரி யாதுட னிருந்து வரவே. |
(பொ-நி.) இசையின் மதுரவாரி எனலாகும் இசை மாது, ஏழிசை வளர்க்க உரியாள் அரிது எனா உடன் இருந்துவர; (எ-று.) (வி-ம்.) சோழகுலசேகரன் - குலோத்துங்கன். இ்சையின் மதுரவாரி- இசை இன்பக்கடல். இசைமாது: ஏழிசை வல்லபி - அரிது எனா - பிரிந்திருத்தல் அரிதென்று. ஏழுபார் உலகு. உலகின்கண் உள்ள ஏழு தீவுகளையும். அரிதெனா பிரியாது என இயைக்க. மூன்றாம் மனைவியாகிய இவள் பிரியாது உடனிருந்தாள் என்க. (54) தியாகவல்லி உடன் சென்றமை 286. | பொன்னின் மாலைமலர் மாலைபணி மாறி உடனே | | புவனி காவலர்கள் தேவியர்கள் சூழ்பி டிவரச் சென்னி யாணையுடன் ஆணையைந டத்தும் உரிமைத் தியாக வல்லிநிறை செல்விஉடன் மல்கி வரவே. |
(பொ-நி.) காவலர்கள் தேவியர்கள் பணிமாறி சூழ்பிடி (மேல்) வர. தியாகவல்லி உடன் மல்கிவர; (எ-று.) (வி-ம்.) பொன்னின் மாலை - பொன்னாலான மாலை. பணிமாறி - தியாகவல்லிக்கு அணிவித்துத்தொண்டு பூண்டு. பிடி - பெண்யானை. புவனி - உலகம். பிடிவர: ஏழாவதன் தொகை. சென்னி-குலோத்துங்கன். ஆணையை - தன்ஆணையையும். நிறைசெல்வி - குறைவற்ற செல்வத்தையுடையாள். தியாகவல்லியாகிய சிறைசெல்வி என்க. உடன் - குலோத்துங்கன் பக்கத்தே. மல்கல்-நெருங்கல். (55) |