அரசரும் பெண்களும் சூழ்ந்து வந்தமை 287. | பிடியின் மேல்வரு பிடிக்குல மநேக மெனவே | | பெய்வ ளைக்கைமட மாதர்பிடி மீதின் வரவே முடியின் மேன்முடி நிரைத்துவரு கின்ற தெனவே முறைசெய் மன்னவர்கள் பொற்குடை கவித்துவரவே. | (பொ-நி.) மடமாதர் பிடிமீதின் வர, மன்னவர்கள் பொற்குடை கவித்துவர; (எ-று.) (வி-ம்.) பிடி - பெண்யானை. குலம் - கூட்டம். பெய்வளை கை - வளையலணிந்த கைகளையுடைய. மடமாதர்-அரசபரிவார மகளிர். முடி- மகுடம். பொற்குடை-பொன்னாலாகிய குடை. (56) அரசரோடு வீரர் சூழ்ந்து வந்தமை 288. | யானை மீதுவரும் யானையு மநேக மெனவே | | அடுக ளிற்றின்மிசை கொண்டர சநேகம் வரவே சேனை மீதுமொரு சேனைவரு கின்ற தெனவே தெளிப டைக்கல னிலாவொளி படைத்து வரவே. |
(பொ-நி.) அரசு அநேகம் வர, படைக்கலன் நிலா ஒளி படைத்துவர; (எ-று.) (வி-ம்.) அடுகளிறு - கொல்கின்ற யானை. மிசை -மேலிடம். தெளி- மாசற்ற. படைக்கலன் - வாள் முதலிய படைக்கருவி. நிலா ஒளி-நிலவைப் போன்ற ஒளி. படைத்து-உண்டாக்கி. (57) முரசு முழக்கும் கொடி வரிசையும் 289. | முகிலின் மேன்முகில் முழங்கிவரு கின்ற தெனவே | | மூரி யானைகளின் மேன்முர சதிர்ந்து வரவே துகிலின் மேல்வரு துகிற்குலமு மொக்கு மெனவே தோகை நீள்கொடிகள் மேன்முகி றொடங்கி வரவே. |
(பொ-நி.) யானைகளின்மேல் முரசதிர்ந்துவர, கொடிகள் மேல் முகில் தொடங்கிவர; (எ-று.) (வி-ம்.) முகில் - மேகம். மூரி - வலிமை. துகில் - துகிற்கொடி. தோகை - பெருங்கொடிகள். முகில் தொடங்கி - மேகங்கள் தொடர்ந்து. வானத்தே துகிற்கொடியும் மேகமும் மாறுபட்டுத் தோன்றின என்க. (58) |