(பொ-நி.) சிவிகை வெள்ளமும், கவிகை வெள்ளமும், யமுனை வெள்ளமும், கங்கை வெள்ளமும் (ஆதலைக்) காண்மின்; (எ-று.) (வி-ம்.)சிவிகை - பல்லக்கு. வெள்ளம் - கூட்டம். நித்திலம் -முத்து. கவிகை - குடை. காலினால் - வாய்க்கால் வழியே; அன்றித் தம் கால்களினால். வரும் - நடந்துவரும். (61) கொடிகள் சென்ற இயல்பு 293. | கெண்டை மாசுணம் உவணம் வாரணம் | | கேழல் ஆளிமா மேழி கோழிவில் கொண்ட ஆயிரம் கொடிநு டங்கவே குளிறு வெம்புலிக் கொடிகு லாவவே. |
(பொ-நி.) ஆயிரம் கொடி நுடங்க, வெம்புலிக்கொடிகுலாவ; (எ-று.) (வி-ம்.) கெண்டை - மீன். மாசுணம் - பாம்பு. உவணம் - கருடன். வாரணம் - யானை. கேழல்-பன்றி. ஆளி-சிங்கம். மேழி-கலப்பை. நுடங்க- அசைய. குமுறு - பெருமுழக்கஞ்செய்கின்ற. குலாவ-(அவற்றுள்)மேம்பட்டு விளங்க. (62) பெண்கள் கூட்டம் பரந்தது 294. | தொடைகள் கந்தரம் புடைகொள் கொங்கைகண் | | சோதி வாண்முகம் கோதை யோதிமென் நடைகள் மென்சொலென்று அடைய வொப்பிலா நகைம ணிக்கொடித் தொகைப ரக்கவே. |
(பொ-நி.) தொடைகள், கந்தரம், கொங்கை, கண், முகம், ஓதி, மென்நடைகள், மென் சொல் என்று ஒப்பிலாகொடித் தொகை பரக்க; (எ-று.) (வி-ம்.) கந்தரம்-கழுத்து. புடைத்தல்-முற்பட்டுத்தோன்றுதல். வாள்- ஒளி. கோதை - மாலை. ஓதி-கூந்தல். அடைய-இவை எல்லாவற்றாலும். நகை-புன்முறுவல், மணிக்கொடி-அழகிய பூங்கொடி(போன்ற பெண்கள்.) தொகை - கூட்டம். பரக்க-பரவ. (63) |