பக்கம் எண் :

118கலிங்கத்துப்பரணி

     (பொ-நி.) சிவிகை  வெள்ளமும்,  கவிகை  வெள்ளமும்,  யமுனை
வெள்ளமும், கங்கை வெள்ளமும் (ஆதலைக்) காண்மின்; (எ-று.)

     
(வி-ம்.)சிவிகை - பல்லக்கு. வெள்ளம் - கூட்டம். நித்திலம் -முத்து.
கவிகை  - குடை.  காலினால் - வாய்க்கால்  வழியே;   அன்றித்   தம் 
கால்களினால். வரும் - நடந்துவரும்.                           (61)

கொடிகள் சென்ற இயல்பு

293.கெண்டை மாசுணம் உவணம் வாரணம்
      கேழல் ஆளிமா மேழி கோழிவில்
கொண்ட ஆயிரம் கொடிநு டங்கவே
     குளிறு வெம்புலிக் கொடிகு லாவவே.

     (பொ-நி.) ஆயிரம் கொடி நுடங்க, வெம்புலிக்கொடிகுலாவ; (எ-று.)

    
 (வி-ம்.)  கெண்டை - மீன். மாசுணம் - பாம்பு. உவணம் - கருடன்.
வாரணம் - யானை. கேழல்-பன்றி. ஆளி-சிங்கம். மேழி-கலப்பை. நுடங்க-
அசைய. குமுறு - பெருமுழக்கஞ்செய்கின்ற.  குலாவ-(அவற்றுள்)மேம்பட்டு
விளங்க.                                                 (62)

பெண்கள் கூட்டம் பரந்தது

294.தொடைகள் கந்தரம் புடைகொள் கொங்கைகண்
      சோதி வாண்முகம் கோதை யோதிமென்
நடைகள் மென்சொலென்று அடைய வொப்பிலா
     நகைம ணிக்கொடித் தொகைப ரக்கவே.

     (பொ-நி.) தொடைகள், கந்தரம்,  கொங்கை,  கண்,  முகம்,  ஓதி,
மென்நடைகள்,  மென்  சொல்  என்று  ஒப்பிலாகொடித் தொகை பரக்க;
(எ-று.)

     
(வி-ம்.) கந்தரம்-கழுத்து. புடைத்தல்-முற்பட்டுத்தோன்றுதல். வாள்-
ஒளி. கோதை - மாலை.  ஓதி-கூந்தல்.  அடைய-இவை  எல்லாவற்றாலும்.  நகை-புன்முறுவல்,  மணிக்கொடி-அழகிய  பூங்கொடி(போன்ற  பெண்கள்.) தொகை - கூட்டம். பரக்க-பரவ.
                                                       (63)