பக்கம் எண் :

அவதாரம்119


இதுவும் அது

295.எங்குமுள மென்கதலி யெங்குமுள
      தண்கமுகம் எங்குமுள பொங்கு மிளநீர்
எங்குமுள பைங்குமிழ்கள் எங்குமுள
     செங்குமுதம் எங்குமுள செங்க யல்களே.

     (பொ-நி.)கதலிஎங்குமுள; கமுகம்  எங்குமுள; இளநீர்  எங்குமுள;
குமிழ்கள் எங்குமுள; குமுதம் எங்குமுள; கயல்கள் எங்குமுள; (எ-று.)

     (வி-ம்.) கதலி - தொடைகளாகிய  வாழை. கமுகு-கழுத்துக்களாகிய
பாக்கு மரம். இளநீர்-கொங்கைகள். குமிழ்-மூக்குக்களாகிய குமிழம் பூக்கள்.
குமுதம்-வாயிதழாகியசெவ்வாம்பல். கயல்-கண்களாகிய மீன்கள்.      (64)

இதுவும் அது

296.ஆறலைத ரங்கமுள அன்னநடை
      தாமுமுள ஆலைகமழ் பாகு முளவாய்
வேறுமொரு பொன்னிவள நாடுசய
     துங்கன்முன் விதித்ததுவும் ஒக்கு மெனவே.

     (பொ-நி.)  தரங்கம்  உள;  அன்னநடைஉள;  பாகும்  உள. ஆய்
வேறுமொரு பொன்னி வளநாடு சயதுங்கன் முன் விதித்தது ஒக்கும்; (எ-று.)
 

     (வி-ம்.) தரங்கம்-அலை  (பெண்களின் வயிற்று  மடிப்பு.)  ஆலை-
கரும்பாலை. பாகு-கரும்பின்பாகு போன்ற பெண்களின்  சொல். சயதுங்கன்:
குலோத்துங்கன். விதித்ததுவும்-ஏற்படுத்தியதும்.                 (65)

உடன்சென்ற யானைக்கூட்டத்தின் காட்சி

297.வேழநிரை என்றமலை யெங்குமிடை
      கின்றஅயில் வென்றிஅப யன்ற னருளால்
வாழஅப யம்புகுது சேரனொடு
     கூடமலை நாடடைய வந்த தெனவே.