(பொ-நி.) வேழநிரை, எங்கும்மிடைகின்ற, அபயம்புகுது சேரனொடு மலைநாடு அடைய வந்ததென; (எ-று.) (வி-ம்.) வேழநிரை - யானைக்கூட்டம். மலை: உருவகம். மிடைகின்ற-நெருங்கிச் செல்வன. அயில் -வேல். வாழ - நல்வாழ்வு பெற, அபயம் - அடைக்கலம். புகுது - புகுந்த. அடைய - முற்றும். யானைகள் நெருங்கியிருப்பன மலை நாடே வந்தது போன்றிருந்த தென்க. (66) இதுவும் அது 298. | அக்கிரிகு லங்கள்விடும் அங்குலியின் | | நுண்திவலை அச்செழியர் அஞ்சி விடுமத் திக்கிலுள நித்திலமு கந்துகொடு வீசியொரு தென்றல்வரு கின்றதெனவே. |
(பொ-நி.) கிரிகுலங்கள் விடும் திவலை நித்தில முகந்துகொடு வீசி,தென்றல் வருகின்றதென; (எ-று.) (வி-ம்.) கிரிகுலம்-யானைக்கூட்டம். அங்குலி - துதிக்கையின் நுனி. திவலை - நீர்த்திவலை, செழியர் - பாண்டியர். அத்திக்கு -தெற்குத் திக்கு. நித்திலம் - முத்து. முகந்து - மொண்டு கொடு. இடைக்குறை (கொண்டு) என - என்று சொல்லும்படி ஆக. (67) குலோத்துங்கன் தில்லைக் கூத்தனை வணங்கித் திருவதிகை யடைந்தது 299. | தென்றிசையி னின்றுவட திக்கின்முகம் | | வைத்தருளி முக்கணுடை வெள்ளி மலையோன் மன்றினட மாடியருள் கொண்டு விடை கொண்டதிகை மாநகருள் விட்ட ருளியே. |
(பொ-நி.) வடதிக்கின் முகம் வைத்தருளி, மன்றின் நடமாடி அருள் கொண்டு, விடைகொண்டு, அதிகை நகருள் விட்டருளி; (எ-று.) (வி-ம்.)முகம் வைத்தல்- முகம்நோக்கிப் புறப்படல். வெள்ளிமலை- கைலைமலை. மன்றில் நடமாடி: தில்லைக்கூத்தன். அதிகைமா நகர்- திருவதிகை என்னும் சிறந்த நகரம், விட்டருளி-சேனைகளோடு தங்கியருளி. (68) |