குலோத்துங்கன் கச்சியடைந்தமை 300. | விட்டஅதி கைப்பதியி னின்றுபய | | ணம்பயணம் விட்டுவிளை யாடி அபயன் வட்டமதி ஒத்தகுடை மன்னர்தொழ நண்ணினன்வ ளங்கெழுவுகச்சி நகரே. |
(பொ-நி.) அபயன் அதிகைப்பதியினின்று, பயணம் பயணம் விட்டுவிளையாடி மன்னர்தொழ, கச்சிநகர் நண்ணினன். (எ-று.) (வி-ம்.) பயணம், பயணம்விட்டு - பயணப்பட்டும். பின், ஓரிடத்தைவிட்டும்; பின்பயணப்பட்டும். மன்னர் சிற்றரசர் பலர். நண்ணினன்-அடைந்தான்; கெழுவு-பொருந்திய (69)் இங்ஙனம் கூறும் காளிதிரு முன் கலிங்கத்துப் போர்கண்ட பேய் வந்தமை 301. | என்னுமித நன்மொழி எடுத்திறைவி | | சொல்லுவதன் முன்னம்இகல் கண்ட தொருபேய் தன்னுடைய கால்தனது பின்பட மனத்துவகை தள்ளிவர ஓடிவரவே. |
(பொ-நி.) இறைவி மொழி எடுத்துச் சொல்லுவதன்முன்னம் இகல்கண்டதொரு பேய், கால்பின்பட, உவகை தள்ளிவர, ஓடிவர; (எ-று.) (வி-ம்.) என்னும் - காஞ்சி அடைந்தான் என்னும், இதநன்மொழி- இதமான நல்மொழி. இகல் - கலிங்கப்போர். பின் - முதுகு. மனத்துவகை- மன மகிழ்வு: ஏழன்தொகை. தள்ளிவர-முன்னிட. (70) கலிங்கப்போர் கண்ட பேய் மொழிந்தது 302. | கலிங்கர் குருதி குருதி | | கலிங்கம் அடைய அடைய மெலிந்த வுடல்கள் தடிமின் மெலிந்த வுடல்கள் தடிமின். |
|