(வி-ம்.) போதா - போதமாட்டா; பற்றா. எயிறு - பற்கள். ஈண்டுதல்-விரைதல். போதும்-செல்வோம். (74) இதுவும் அது 306. | சிரமலை விழுங்கச் செந்நீர்த் | | திரைகடல் பருகல் ஆகப் பிரமனை வேண்டிப் பின்னும் பெரும்பசி பெறவும் வேண்டும். |
(பொ-நி.) விழுங்க, பருகல் ஆக, வேண்டி, பசிபெற வேண்டும்; (எ-று.) (வி-ம்.) சிரம்-தலை. செந்நீர்-குருதி. பிரமன்-நான்முகன். பெரும் பசி-மிக்கபசி; (75) அதுகேட்ட மற்றைப் பேய்கள் நிலை 307. | என்ற வோசை தஞ்செவிக் | | கிசைத்தலும் தசைப்பிணம் தின்ற போற்ப ருத்துமெய் சிரித்துமேல் விழுந்துமே. |
(பொ-நி.) என்ற ஓசை இசைத்தலும், தின்றபோல் பருத்து, சிரித்து, மேல் விழுந்து; (எ-று.) (வி-ம்.) ஓசை - கலிங்கப்போர் கண்ட பேயின் பேச்சொலி. மெய் பருத்து என இயைக்க. மேல்விழுந்து - ஒன்றன்மேல் ஒன்றாக விழுந்து. தசைப்பிணம் - சதையையுடைய பிணங்கள். (76) இதுவும் அது 308. | ஓகை சொன்ன பேயின் வாயை | | ஓடி முத்த முண்ணுமே சாகை சொன்ன பேய்க ளைத்த கர்க்க பற்கள் என்னுமே. |
(பொ-நி.) வாயை முத்தம் உண்ணும், பற்கள் தகர்க்க என்னும். (எ-று.) |