பக்கம் எண் :

124கலிங்கத்துப்பரணி

     (வி-ம்.) ஓகை   மகிழ்ச்சிச்செய்தி. முத்தம்   உண்ணும்  - முத்தங்
கொடுக்கும். சாகை - பசியால்  சாதலை.  தகர்த்தல் - உடைத்தல். பற்கள்-பற்களை.                                                 (77)

இதுவும் அது

309. பிள்ளை வீழ வீழ வும்பெ ருந்து ணங்கை கொட்டுமே
  வள்ளை பாடி ஆடி ஓடி வாவெ னாவ ழைக்குமே.

     (பொ-நி.) துணங்கை கொட்டும், பாடி, ஓடி அழைக்கும்; (எ-று.)

     (வி-ம்.) பிள்ளை-கையில் இடுக்கியுள்ள பேயின் பிள்ளைகள், வீழவும்-
கீழே வீழ்ந்துவிடவும். துணங்கை - பேய்க்கூத்து. வள்ளை உலக்கைப்பாட்டு.
வா எனா-வருக என்று கூறி. அழைக்கும்-மற்றப் பேய்களையும் விளையாட
அழைக்கும்.                                              (78)

இதுவும் அது

310.எனாஉ ரைத்த தேவி வாழி
      வாழி யென்று வாழ்த்தியே
கனாஉ ரைத்த பேயி னைக்க
     ழுத்தி னிற்கொ டாடுமே.

     (பொ-நி.) வாழ்த்தி, கழுத்தினிற்கொடு ஆடும். (எ-று.)

     (வி-ம்.) எனா-குலோத்துங்கன் காஞ்சியில் வந்து  தங்கினான்  என்று.
தேவி-காளி. உரைத்த-முன்பு உரைத்த. கொடு:இடைக்குறை: கட்டிக் கொண்டு.
ஆடும்-கூத்தாடும்.                                        (79)

கலிங்கத்துப்பேயைக் காளி போர்நிலை வினாயது

311.ஆடிவரு பேய்களின் அலந்தலை
      தவிர்த்தடு பறந்தலை யறிந்த தனினின்
றோடிவரு பேயைஇக லுள்ளபடி
     சொல்கென வுரைத்தன ளுரைத்த ருளவே.

     (பொ-நி.)  தவிர்த்து  பேயை  இகல்  சொல்க  என  உரைத்தனள்.
உரைத்தருள; (எ-று.)

     (வி-ம்.) பேய்கள் -போர்ச்செய்தி கேட்ட பேய்கள். அலந்தலை-நிலை
கலங்கிய தன்மை. பறந்தலை-போர்க்களம். இகல்-போர்.  உரைத்து  அருள-
சொல்ல.                                               (80)