பக்கம் எண் :

காளிக்குக்கூளி கூறியது127


     (பொ-நி.)    உரைக்கஒண்ணாதேனும்,   சிறியேன்,    விண்ணப்பம்
செய்யக்கேட்டருள்; (எ-று.)

     (வி-ம்.) ஒருவர்க்கு ஒருவாய்கொண்டு  - ஒரே வாயினால் ஒண்ணாது
என இயைக்க. செரு -போர். விண்ணப்பம் செய்ய-சிறிதளவு தெரிவிக்க.
                                                         (2)

காஞ்சியின் சிறப்பு

314.பாரெ லாமுடை யான்அப யன்கொடைப்
      பங்க யக்கரம் ஒப்பெனப் பண்டொர்நாள்காரெ லாமெழுந் தேழரை நாழிகைக் காஞ்ச
     னம்பொழி காஞ்சிய தன்கணே.

     (பொ-நி.)  அபயன்கரம்  ஒப்பென,  ஒருநாள்  காரெலாம் காஞ்சனம்
பொழி காஞ்சி அதன்கண்; (எ-று.)

     (வி-ம்.) பார்  எலாம் - உலகம்   யாவும். அபயன் - குலோத்துங்கன்.
பங்கயம் - தாமரை. கார் -மேகம். காஞ்சனம்-பொன்.               (3)

குலோத்துங்கன் தங்கிய மாளிகை மண்டப இயல்பு

315.அம்பொன் மேரு வதுகொ லிதுகொலென்
      றாயி ரங்கதிர் வெய்யவன் ஐயுறும்
செம்பொன் மாளிகைத் தென்குட திக்கினில்
     செய்த சித்திர மண்டபந் தன்னிலே.

     (பொ-நி.) வெய்யவன்  ஐயுறும்  மாளிகை  மண்டபம் தன்னில்; (எ-று.)

     (வி-ம்.) இது  மாளிகையைக்  குறித்தது. வெய்யவன்-ஞாயிறு. குடக்கு-
மேற்கு. சித்திரமண்டபம். அழகிய மண்டபம்.                     (4)

வீற்றிருந்த இடச்சிறப்பு

316.மொய்த்தி லங்கிய தாரகை வானின்நீள்
      முகட்டெ ழுந்த முழுமதிக் கொப்பென
நெய்த்தி லங்கிய நித்திலப் பந்தரின்
     நின்று வெண்குடை ஒன்று நிழற்றவே.