(பொ-நி.) தாரகை வானின் முகட்டு எழுந்த மதிக்கு ஒப்பு என நித்திலப் பந்தரில் வெண்குடை ஒன்று நிழற்ற; (எ-று.) (வி-ம்.) மொய்த்து -நெருங்கி. தாரகை - உடுக்கூட்டம். முகடு -உச்சி. நெய்த்து -நெய்த்தன்மைதோற்றி (வழவழப்பாயும் பளபளப்பாயும் தோற்றி) நித்திலம் முத்து. நிழற்ற-நிழலைச் செய்ய. (5) வெண் கொற்றக் குடைக்கீழ் வெண்சாமரை வீச இருந்தமை 317. | மேற்க வித்த மதிக்குடை யின்புடை | | வீசு கின்றவெண் சாமரை தன்றிருப் பாற்க டல்திரை ஓரண் டாங்கிரு பாலும் வந்து பணிசெய்வ போலவே. |
(பொ-நி.)மேல்கவித்தமதிக் குடையின் புடைவீசுகின்ற வெண்சாமரை, பால்கடல் திரை பணிசெய்வ போல; (எ-று.) (வி-ம்.) மேல்கவித்த - மேலேகவிந்திருக்கின்ற. புடை. பக்கம். திரை- அலை, இருபாலும்-இருபக்கமும். பணிசெய்வ - பணிவிடை செய்வன. (6) சிம்மாதனத்தில் இருந்தமை 318. | அங்கண் ஞால மனைத்தும் புயத்தில்வைத் | | தாட கக்கிரி யில்புலி வைத்தவன் சிங்க ஆசனத் தேறி யிருப்பதோர் சிங்க ஏறெனச் செவ்வி சிறக்கவே. |
(பொ-நி.) ஞாலம் அனைத்தும் புயத்தில் வைத்து, கிரியில் புலிவைத்தவன் சிங்க ஏறு எனச் செவ்வி சிறக்க; (எ-று.) (வி-ம்.) அங்கண் - அழகிய இடம். ஞாலம் - உலகம். ஆடகக் கிரி-மேருமலை. சிங்க ஆசனம் - அரியணை. சிறக்க-மேம்பட. ஏறு-ஆண். செவ்வி-அழகு. (7) |