(வி-ம்.) நாடகம் - நாட்டியம்; (புறநடம்), நிருத்தம் - தாண்டவம். நால்வகைப் பண் - பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை என்னும் பண்கள். அணுக்கிமார்-அணுகியிருப்போர். (10) சூதர், மாகதர், மங்கலப்பாடகர் புகழ்ப்பாடல் 322. | சூதர் மாகதர் ஆதிய மாந்தரும் | | துய்ய மங்கலப் பாடகர் தாமும்நின் பாத மாதர ராயவர் கட்கெலாம் பைம்பொன் மௌலி எனப்புகழ் பாடவே. |
(பொ-நி.) மாந்தரும், பாடகர்தாமும் "நின்பாதம் மௌலி" எனப்புகழ் பாட; (எ-று.) (வி-ம்.) சூதர் - நின்று ஏத்துவோர். மாகதர்- இருந்து ஏத்துவோர். ஆதரர்-நண்பு பூண்ட சிற்றரசர் (ஆதரம்-அன்பு). மௌலி-முடி. (11) இசைவல்லார் அருகு சூழ்ந்தமை 323. | வீணை யாழ்குழல் தண்ணுமை வல்லவர் | | வேறு வேறிவை நூறுவி தம்படக் காண லாம்வகை கண்டனம் நீயினிக் காண்டல் வேண்டு மெனக்கழல் போற்றவே. |
(பொ-நி.) வல்லவர்; "நூறு விதம்படக் கண்டனம் காண்டல் வேண்டும்," எனப் போற்ற; (எ-று.) (வி-ம்.) தண்ணுமை -மத்தளம், கண்டனம்-இசைகூட்டி அமைத்தோம். கழல்-திருவடிகள். (12) குலோத்துங்கன் இசைப்பாடல் கேட்டதும் ஆராய்ந்து குற்றங் கண்டதும் 324. | தாள மும்செல வும்பிழை யாவகை | | தான்வ குத்தன தன்னெதிர் பாடியே காள மும்களி றும்பெறும் பாணர்தம் கல்வி யில்பிழை கண்டனன் கேட்கவே. |
(பொ-நி.) பிழையாவகை பாடி, பெறும் பாணர்தம் கல்வியில்பிழை கண்டனன் கேட்க; (எ-று.) |