(வி-ம்.) செலவு-உலவிப்பாடுதல். தான்:குலோத்துங்கன், குலோத்துங்கன் இசை நூல் இயற்றியிருந்தான் என்க. "சோழ குலசேகரன் வகுத்த இசையி்ன்" (தா.285) என வந்தது காண்க. காளம்-ஊதுகொம்பு. கண்டனன்: முற்றெச்சம். (13) சிற்றரசர்கள் குடைபிடித்துச் சாமரை வீசியது 325. | வெங்க ளிற்றிலி ழிந்தபின் வந்தடி | | வீழ்ந்த மன்னவர் வெந்நிடு முன்இடு தங்கள் பொற்குடை சாமரம் என்றிவை தாங்கள் தங்கரத் தால்பணி மாறவே. |
(பொ-நி.) களிற்றினில் இழிந்தபின், அடிவீழ்ந்த மன்னவர் தம் கரத்தால், குடை சாமரம் என்றிவை பணி மாற; (எ-று.) (வி-ம்.) வெந்நிடுதல் - புறமுதுகிடுதல். இடு -போர்க்களத்தில் போட்டு விட்டுப்போன. பணிமாற-பணிவிடை செய்ய. (14) சிற்றரசர் தேவிமார் சேடியராய் இருந்தமை 326. | தென்ன ராதிந ராதிப ரானவர் | | தேவி மார்கள்தன் சேடிய ராகவே மன்ன ராதிபன் வானவ ராதிபன் வந்தி ருந்தனன் என்னஇ ருக்கவே. |
(பொ-நி.) நராதிபரானவர் தேவிமார்கள் சேடியராக, ஆதிபன் இருக்க; (எ-று.) (வி-ம்.) தென்னர் - பாண்டியர். நராதிபர் - அரசர். நராதிபரனவர் தேவிமார்கள்; நான்கன்தொகை. தேவிமார்கள்-மனைவியர். சேடி-பணிப்பெண். மன்னர் ஆதிபன்-குலோத்துங்கன். வானவர்-ஆதிபன்-இந்திரன். (15) மன்னர்கள் புறத்தே இருக்க, அகத்தே அமைச்சரோடு இருந்தமை 327. | மண்ட லீகரும் மாநில வேந்தரும் | | வந்து ணங்கு கடைத்தலை வண்டைமன் தொண்டை மான்முதல் மந்திரப் பாரகர் சூழ்ந்து தன்கழல் சூடி இருக்கவே. |
|