(பொ-நி.) மண்டலீகரும் வேந்தரும் கடைத்தலை (இருக்க), மந்திரப் பாரகர் தன்கழல் சூடி இருக்க; (எ-று.) (வி-ம்.) மண்டலீகர் - நாட்டின் பிரிவாகிய மண்டலத்தலைவர்கள். மாநிலம்-மிக்க நாடு. வேந்தர்-பேரசர். உணங்குதல்-வருந்துதல். கடைத்தலை- வாயில். ஆணைபெற்றன்றி உள்ளே புகமுடியாதாதலால் உணங்குகடைத் தலையாயிற்று. "கடைத்தலை இருக்க" என "இருக்க" என்பது ஈரிடத்தும் இயைந்தது; வண்டை-ஒரு நகரம். வண்டையன் ஆகிய தொண்டைமான் என்க. தொண்டைமான்-கருணாகரத் தொண்டைமான். மந்திரப்பாரகர் - சூழ்ச்சிவல்ல அமைச்சர். மந்திரம்-சூழ்ந்து என்க. பாரகர்-கரைகண்டவர். கழல்-பாதம். (16) மன்னர்கள் ஆணைபெற்று உள்புகுந்தமை 328. | முறையி டத்திரு மந்திர வோலையாள் | | முன்வ ணங்கி முழுவதும் வேந்தர்தம் திறையி டப்புற நின்றனர் என்றலும் செய்கை நோக்கிவந் தெய்தி யிருக்கவே. |
(பொ-நி.) முறையிட, மந்திர ஓலையாள் வணங்கி, வேந்தர் புறம் நின்றனர் என்றலும், செய்கை நோக்கி வந்து எய்தி இருக்க; (எ-று.) (வி-ம்.)முறையிட - அரசர்கள் முறையிட. திருமந்திர ஓலை ஆள் அரசன் கட்டளைகளை எழுதி நிறைவேற்றுவோன். முன் -குலோத்துங்கன் முன். திறைஇட - கப்பம் செலுத்த. திறைமுழுவதும் என இயைக்க. செய்கை- உடன்பட்ட செய்கை. எய்தி-குலோத்துங்கனை எய்தி. (17) ஆங்குவந்து - சூழ்ந்த அரசர்கள் 329. | தென்னவர் வில்லவர் கூபகர் | | சாபகர் சேதிபர் யாதவரே கன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே. | (பொ-நி.) தென்னவர் ----------------------- கோசலர்; (எ-று.) (வி-ம்.) தென்னவர் - பாண்டியர். வில்லவர் - சேரர். கூபகர் - கொல்லமாண்டவர். கைதவர் - பாண்டியகுலத்து ஒருசாரார். காடவர் - பல்லவகுலத்து ஒரு பிரிவினர். (18) |