பக்கம் எண் :

காளிக்குக்கூளி கூறியது133


இதுவும் அது

330.கங்கர் கராளர் கவிந்தர்
      துமிந்தர் கடம்பர் துளும்பர்களே
வங்கரி லாடர்ம ராடர்
     விராடர் மயிந்தர் சயிந்தர்களே.
 
331சிங்களர் வங்களர் சேகுணர்
      சேவணர் செய்யவ ரையணரே
கொங்கணர் கொங்கர்கு லிங்கர்
     சவுந்தியர் குச்சரர் கச்சியரே.
 
332.வத்தவர் மத்திரர் மாளுவர்
      மாகதர் மச்சர் மிலேச்சர்களே
குத்தர்கு ணத்தர் வடக்கர்
     துருக்கர் குருக்கர் வியத்தர்களே.
 

     (பொ-நி.) கங்கர் ------------------------வியத்தர்கள்; (எ-று.)
                                                        (19)

     (வி-ம்.) கங்கர்-மைசூர்ப்பகுதி ஆண்டவர்கள்.(19,20,21)

வந்த அரசர் செய்கை

323.எந்நக ரங்களும் நாடு
      மெமக்கருள் செய்தனை எம்மையிடச்
சொன்னத னங்கள் கொணர்ந்தனம்
     என்றடி சூடுக ரங்களொடே.

     (பொ-நி.) ழுநகரங்களும்   நாடும்   அருள்   செய்தனை;   தனங்கள் கொணர்ந்தனம்ழு என்று அடிசூடு கரங்களொடு; (எ-று.)

     (வி-ம்.) அருள் செய்தனை-யாங்கள் ஆளுமாறு விட்டருளினை, தனம்-பொருள். அடிசூடு-திருவடிகளில் வணங்குகின்ற. கரம்-கை.         (22)