(வி-ம்.) பண்ணுக - அலங்கரிக்க; கணிப்பு-அளவிடல.் நண்ணுதல்- நெருங்குதல். படைச் செருநர்- படைவீரர். செருக்களம்-போர்க்களம். இகல்- போர். (83) கலிங்கப்படை எழுந்த ஆர்ப்புக் கூறியது 395. | கலிங்கமவை யேழினு மெழுந்ததொரு | | பேரொலி கறங்குகட லேழு முடனே மலங்கியெழு பேரொலி யெனத்திசை திகைப்புற வருந்தொனி யெழுந்த பொழுதே. |
(பொ-நி.) கலிங்கமேழினும் எழுந்த பேரொலி, கடல் ஏழும் ஏழு பேரொலியென, திசை திகைப்புற வரும், தொனி எழுந்த பொழுது; (எ-று.) (வி-ம்.) கலிங்க நாடு ஏழு பிரிவாய் அமைந்திருந்ததென்க. கறங்கு கடல்- ஒலிக்கின்ற கடல். மலங்குதல்-கலங்குதல். திசை; இடவாகு பெயர். திகைப்பு - திக்குமுக்காடிப் போதல். தொனி-ஓசை. (84) படை எழுச்சி கூறியது 396. | தொளைமுக மதமலை யதிர்வன | | தொடுகடல் பருகிய முகிலெனவே வளைமுக நுரையுக வருபரி கடலிடை மறிதிரை யெனவெழவே. |
(பொ-நி.) மதமலை அதிர்வன, முகிலென ( எழ), வருபரி மறி திரை என எழ; (எ-று.)
(வி-ம்.) தொளை முகம் - முகத்தே தொளை பொருந்திய துதிக்கையுடையது. மதமலை -யானை. அதிர்வன முகிலென்று தோன்றும்படி (போர்க்கு) எழுந்தன என்க. வளை முகம் - வளைந்த வாய். பரி-குதிரை. மறிதல்-சுருண்டு விழுதல். திரை-அலை. எழ-(போர்க்கு) எழ. (85) இதுவும் அது 397. | இடையிடை யரசர்கள் இடுகுடை | | கவரிகள் இவைகடல் நுரையெனவே மிடைகொடி பிறழ்வன மறிகடல் அடையவும் மிளிர்வன கயலெனவே. |
|