(பொ-நி.) குடை, கவரிகள், இவை கடல் நுரை என, கொடி பிறழ்வன, மிளிர்வன கயல் என; (எ-று.) (வி-ம்.) அரசர்கள் இடுகுடை: நான்கன் தொகை. இடுகுடை-அணிபெற இட்ட குடைகள். கவரிகள்-வெண்சாமரைகள். மிளிர்வன ஆகிய கயல் என்க. குடைகளும் கவரிகளும் கடல்நுரையையொத்தன; மிடைகொடி-நெருங்கிய கொடிகள்; பிறழ்வன-அசைவன. கொடிகள் பிறழ்கின்ற மீன்கள் யொத்தன என்க. (86) இதுவும் அது 398. | அலகினொ டலகுகள் கலகல | | எனுமொலி அலைதிரை ஒலியெனவே உலகுகள் பருகுவ தொருகடல் இதுவென உடலிய படை எழவே. |
(பொ-நி.) கலகல எனும் ஒலி திரைஒலி என, படை. கடல் இது என எழ, (எ-று.) (வி-ம்.) அலகு-வேல் வாள் முதலிய படைக்கலங்கள். கலகல: ஒலிக் குறிப்பு. திரை-கடல்; அலை. உலகுகள் பருகுவதொரு கடல்- ஊழிக்காலத்தெழுங்கடல். உடலுதல்-மாறுபட்டெழுதல். (87) இதுவும் அது 399. | விசைபெற விடுபரி இரதமும் | | மறிகடல் மிசைவிடு கலமெனவே இசைபெற உயிரையும் இகழ்தரும் இளையவர் எறிசுற வினம் எனவே. |
(பொ-நி.) இரதமும், கடல்மிசைவிடு கலமென, இளையவர் சுறவினம் என; (எ-று.) (வி-ம்.) விசை பெற-விரைவு கொள்ள. பரி-குதிரை. மிசைவிடு-மேலே விட்ட. கலம் - மரக்கலம். உயிரையும் இகழ்தரும் - தம் உயிரைக்கூடப் பொருட்படுத்தாத. இதனைச், 'சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்' என்பர், வள்ளுவர். இளையவர்-வீரர்கள். சுறவு-சுறாமீன். இனம்-கூட்டம். (88) |